பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!
Aug 13, 2026, 05:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

Murugesan M by Murugesan M
Oct 4, 2025, 08:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக் களம் போர்க் களமாக மாறியிருக்கிறது… மக்கள் போராடுவதை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான் ராணுவம், அடக்குமுறையை கையாண்டுள்ளது. போராட்டத்திற்கான காரணம்.. அதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.

பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, 12 சட்டமன்ற தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும், மானிய விலையில் கோதுமை மாவு, நியாயமான மின்சார கட்டணம் உள்ளிட்ட 38 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு 12 அப்பாவி மக்கள் இரையாக்கப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனால் வெகுண்டெழுந்த போராட்டக்காரர்கள், அரசு எவ்வளவு ஒடுக்குமுறையை கையாண்டாலும், நீதி கிடைக்கும் வரை போராட்டத்திலிருந்து விலகமாட்டோம் என்றும் முழங்கியுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வளர்ச்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் அரசு, துரும்பைக் கூடக் கிள்ளிபோடவில்லை என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் கையாண்டுவரும் அடக்குமுறை சம்பவங்கள் ஷெபாஸ் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியை மேலும் தூண்டியுள்ளது.

மக்கள் விரோத போக்குடன் செயல்படும் பாகிஸ்தான் அரசையும், ராணுவத்தையும் அவாமி ஆக்ஷ்ன் கமிட்டி கடுமையாக விமர்சித்துள்ளது. காஷ்மீர் சுதந்திரமாக இருப்பதாகக் கூறும் ஆட்சியாளர்கள், சுரண்டலையும், அடக்குமுறைகளையுமே தடையின்றி வழங்கி வருவதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மின் கட்டண உயர்வு, உணவுப் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டம், தற்போது பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தை நேரடியாக எதிர்கொள்ளும் ஒரு முழுமையான இயக்கமாக மாறியுள்ளது.

ஆனால் இதற்கு நியாயமான தீர்வு காண முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான் அரசோ, பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய படையினரையும், ஆயிரக்கணக்கான வீரர்களையும் தயாராக நிறுத்திவைத்துள்ளது. அண்மையில் கைபர் பக்துன்கவா பகுதியில் சொந்த நாட்டு மக்கள் மீதே பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இது ஷெபாஸ் ஷெரீப் அரசுக்குக் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Tags: pakistanRepression in Pakistan-occupied Kashmir: People riot against the governmentபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
Share
Tweet
SendShare
Previous Post

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

Next Post

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Related News

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

பாகிஸ்தானில் வெடிக்கும் ராணுவ புரட்சி? : ஆட்சியை கைப்பற்றும் அசீம் முனீர் : தூக்கி எறியப்படும் ஷெபாஸ் ஷெரீப் – சிறப்பு தொகுப்பு!

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies