புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!
Mar 15, 2026, 02:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2025, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் பாணியில், புலம் பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் வகையில், பிரிட்டன் புதிய கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. இது பிரிட்டனில் வாழ்விடம் தேடி அகதிகளாகத் தஞ்சமடைவோருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டினரை வெளியேற்றவும், அமெரிக்கர்களை முன்னிலைபடுத்தவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்த கட்டுப்பாடுகள், புலம் பெயர்ந்தவர்களை கடுமையாகப் பாதித்தது. தற்போது அதே பாணியைப் பிரிட்டனும் கையில் எடுத்திருக்கிறது. குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக்கியுள்ள பிரிட்டன், பிரான்சிலிருந்து படகுகளில் சட்டவிரோதமாகக் குடியேறும் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

புலம் பெயர்ந்தவர்கள் பிரிட்டனில் நிரந்தரமாக வசிக்கும் உரிமையைப் பெறுவதற்கான தகுதி காலம் இதுவரை 5 ஆண்டுகளாக இருந்த நிலையல், தற்போது 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய விதிகளின்படி, பிரிட்டனில் 5 ஆண்டுகள் வாழ்ந்தால் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவதோடு, தங்களது குடும்பத்தினரையும் அழைத்து வரும் உரிமையும் வழங்கப்படும்.

இந்த நடைமுறைக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ள பிரிட்டன், அதற்கான விண்ணப்பத்தையும் நிறுத்திவிட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின் நிரந்தர குடியுரிமை பெறுபவர்கள், குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும், ஆங்கிலம் சரளமாகப் பேச வேண்டும், வழக்குகள் இருக்கக் கூடாது, பிரிட்டனுக்கான அவர்களது பங்களிப்பும் கருத்தில் கொள்ளப்படும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் அகதிகளாகத் தஞ்சமடைபவர்கள் அமெரிக்கா பொன்று நாடு கடத்தப்பட மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உரிமைகள் வழங்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியின்போது, கட்டுப்பாடற்ற குடியேற்றங்கள் அதிகரித்ததாகக் குற்றம்சாட்டிய பிரிட்டன் அரசு, குடியேற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டது.

மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடித்தபின்னர் பிரிட்டனில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருக்க முன்பு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கால அவகாசம் தற்போது 18 மாதங்களாகக் குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையான விசா விதிமுறைகள் இல்லாவிட்டால், பிரிட்டன் அந்நியர்களின் தீவாக மாறிவிடக்கூடிய அபாயம் இருப்பதாகவும், கல்வி, வேலை, குடும்பம் எனக் குடியேற்றம் தொடர்பான எல்லா அம்சங்களிலும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டால்தான் அரசின் கையில் கூடுதல் அதிகாரம் இருக்கும் என்றும் பிரிட்டன் அரசு நம்புகிறது.

இந்நிலையில், புதிய குடியேற்ற விதிகள், இந்தியாவிலிருந்து செல்லும் மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது.

Tags: LondonNew restrictions on migrants: Britain tightens gripUS-styleஅமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்Brittan
ShareTweetSendShare
Previous Post

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Next Post

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies