அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு - ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!
Jan 14, 2026, 12:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

Murugesan M by Murugesan M
Oct 4, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் பயன்படுத்திய அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 போர் விமானங்கள் உள்பட 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏபி சிங் ரகசியத்தை உடைத்துள்ளார். பாகிஸ்தான் தோல்வியையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதுதொடர்பான செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இந்தியாவின் துணிச்சலான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எதிர்க்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் மண்ணை கவ்வியது உலகமே அறிந்த விஷயம். போர் முனையில் இந்தியாவிடம் யுத்தத்தை நிறுத்துமாறு மண்டியிட்ட பாகிஸ்தான், ஏதோ இந்தியாவுக்கு பதிலடியெல்லாம் கொடுத்தது போன்று அவ்வப்போது அப்பட்டமாகப் பொய்யுரைத்து வருகிறது.

அண்மையில் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் கூட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அவ்வாறே சைகை செய்தனர். ஆனால், இந்தியாவோ ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் வெற்றிக் கொடி நாட்டியதைப் போன்றே, மூன்று போட்டிகளில் பாகிஸ்தானை படுக்க வைத்துப் பாடம் புகட்டியது. அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஹின்டன் விமானப்படை தளத்தில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது.

இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் விமானப்படை தலைமை ஏர் மார்ஷல் அமர்பிரித் சிங். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை இந்தியா பந்தாடிய விதத்தை விவரித்த அவர், இது பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு என்று கூறினார். போர் முனையில் பாகிஸ்தானின் 10 போர் விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகப் புதிய தகவல்களையும் வெளியிட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய F-16 ரக போர் விமானங்கள், சீனா வழங்கிய JF -17 ரக போர் விமானங்கள் ஆப்ரேஷன் சிந்தூரின்போது அழிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார். அதுமட்டுமின்றி கண்காணிப்பு விமானம் ஒன்று, பராமரிப்புக்காகத் தரையில் நிறுத்தி வைக்கப்பட்ட 4 முதல் 5 போர் விமானங்களும்வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

போர் முனையில், நான்கு இடங்களில் உள்ள ரேடார்கள், இரண்டு இடங்களில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், இரண்டு ஓடுபாதைகள், மூன்று ஹேங்கர்கள், தரையில் இருந்து ஏவுகணையை அனுப்பும் தளம் உள்ளிட்டவையும் தாக்குதலில் இரையானதாக அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் 300 கிலோ மீட்டர் ஊடுருவிச் சென்று பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்ததாகவும், இந்திய விமானப்படை வரலாற்றில் அதிக தூரம் சென்று தாக்குதல் நடத்தியது சிறப்பான தருணம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு இது உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், போர் நிறுத்தத்தை நோக்கித் தள்ளப்பட்டார்கள் என்றும் விவரித்தார். இந்திய விமானங்களை அழித்ததாகப் பாகிஸ்தான் கூறுவது புனையப்பட்ட கதை என்றும், இந்தியாவின் 15 விமானங்களை சுட்டு வீழ்த்தியாக அவர்கள் நினைத்தால் நினைத்துவிட்டு போகட்டும் என்றும் தெரிவித்தார்.

நம் விமானப்படை தளத்தை அழித்தது, விமானங்களை வீழ்த்தியது தொடர்பாக ஏதேனும் ஒரு படத்தை பார்த்துள்ளீர்களா? ஆனால் பாகிஸ்தானின் இழப்புகளை உறுதி செய்யும் வகையிலான புகைப்படங்கள் நம்மிடம் ஏராளமாக உள்ளதாகவும் அவர் கூறாமல் இல்லை. சில நாள்களுக்கு முன், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றியபோது, ​​பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஏழு இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியிருந்ததார்.

பாகிஸ்தானின் கூற்றுக்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்பது தனிக்கதை. எனினும் அவரது கூற்றை மறுக்கும் விதமாக ஏர் மார்ஷலின் பதில் அமைந்திருக்கிறது.

Tags: இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏபி சிங்Operation SindoorDestroying American F-16 and Chinese JF-17 aircraft - this is what happened in Operation Sindoorஅமெரிக்காவின் F-16சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு
ShareTweetSendShare
Previous Post

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Next Post

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies