மழை குறுக்கிட்டதால் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி கைவிடப்பட்டது.
நியூசிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது.
3-வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.