மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!
Oct 4, 2025, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 4, 2025, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிராமங்களுக்கான குடிநீர் வசதியில் குறையிருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், குழாய்கள் மூலம் நேரடியாகக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என 2019ல் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு, சுத்தமான குடிநீர் தருவதற்கான ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2024ஆம் ஆண்டுக்குள் ஜல் ஜீவன் திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் 2028ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜல் ஜீவன் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கம் மற்றும் சிக்கல்கள் குறித்து ஆராய கடந்த மே மாதம் 100 சிறப்புக்குழுக்களை மத்திய அரசு நியமித்தது. அதன்படி, 29 மாநிலங்களில் ஆய்வு செய்த சிறப்புக் குழுக்கள், திட்டம் தாமதம் ஆவதற்காகக் காரணங்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

சமீபத்தில், பிரதமர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சிறப்புக் குழுக்கள் தயாரித்த அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அதில், தரம் குறைவாகப் பணி நடந்ததால் நிதியை அதிகாரிகள் நிறுத்தி வைத்திருப்பதையும், கூடுதல் விலைபோட்டு ரசீதுகள் போடப்பட்டிருப்பது போன்ற விஷயங்களும் சுட்டிக்காட்டப்பட்டன.

இதனை தொடர்ந்து, சிறிய அளவில் கூடக் குறைகளோ, புகார்களோ இருக்குமேயானால், ஒப்பந்ததாரர்களுக்கு தர வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக நிறுத்தி வைக்கும்படி அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், திட்டப்பணிகளை திரும்பத் திரும்ப ஆய்வு செய்ய வேண்டும் என்றும், உரிய காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள தரத்துடன் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Tags: PM Modimodi news todayPrime Minister Modi orders action to top officials of the central government
ShareTweetSendShare
Previous Post

தனியார் பல் மருத்துவமனை சேதம் – நாமக்கல் தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

Next Post

மகாராஷ்டிரா : ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு – கொள்ளையனை துரிதமாக பிடித்த ராணுவ வீரர், ரயில்வே போலீசார்!

Related News

இஸ்ரேல் அரசு நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

மகாராஷ்டிரா : ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு – கொள்ளையனை துரிதமாக பிடித்த ராணுவ வீரர், ரயில்வே போலீசார்!

இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க ரஷ்யா திட்டம்!

புதுச்சேரி பேக்கரியில் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கனடாவில் தெற்கு ஆசிய படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!

அரசின் மானிய விலை உரங்களை லாரியில் கடத்திய அதிகாரிகள்!

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடமிருந்து பறிக்கப்பட்ட உடைகள், ஆயுதங்கள் விற்பனை!

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி!

கடலூர் : சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீட்டின் மீது இடிவிழுந்ததில் மின்சாதன பொருட்கள் சேதம்!

மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

ஹமாஸ் அமைப்புக்கு இறுதி கெடு விதித்த டிரம்ப்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

இந்தோனேசியா : மதப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 13 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies