மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!
Jan 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

Murugesan M by Murugesan M
Oct 4, 2025, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிராமங்களுக்கான குடிநீர் வசதியில் குறையிருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், குழாய்கள் மூலம் நேரடியாகக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என 2019ல் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு, சுத்தமான குடிநீர் தருவதற்கான ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2024ஆம் ஆண்டுக்குள் ஜல் ஜீவன் திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் 2028ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜல் ஜீவன் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கம் மற்றும் சிக்கல்கள் குறித்து ஆராய கடந்த மே மாதம் 100 சிறப்புக்குழுக்களை மத்திய அரசு நியமித்தது. அதன்படி, 29 மாநிலங்களில் ஆய்வு செய்த சிறப்புக் குழுக்கள், திட்டம் தாமதம் ஆவதற்காகக் காரணங்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

சமீபத்தில், பிரதமர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சிறப்புக் குழுக்கள் தயாரித்த அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அதில், தரம் குறைவாகப் பணி நடந்ததால் நிதியை அதிகாரிகள் நிறுத்தி வைத்திருப்பதையும், கூடுதல் விலைபோட்டு ரசீதுகள் போடப்பட்டிருப்பது போன்ற விஷயங்களும் சுட்டிக்காட்டப்பட்டன.

இதனை தொடர்ந்து, சிறிய அளவில் கூடக் குறைகளோ, புகார்களோ இருக்குமேயானால், ஒப்பந்ததாரர்களுக்கு தர வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக நிறுத்தி வைக்கும்படி அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், திட்டப்பணிகளை திரும்பத் திரும்ப ஆய்வு செய்ய வேண்டும் என்றும், உரிய காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள தரத்துடன் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Tags: PM Modimodi news todayPrime Minister Modi orders action to top officials of the central government
ShareTweetSendShare
Previous Post

தனியார் பல் மருத்துவமனை சேதம் – நாமக்கல் தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

Next Post

மகாராஷ்டிரா : ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு – கொள்ளையனை துரிதமாக பிடித்த ராணுவ வீரர், ரயில்வே போலீசார்!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies