மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!
Aug 13, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

Murugesan M by Murugesan M
Oct 4, 2025, 12:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிராமங்களுக்கான குடிநீர் வசதியில் குறையிருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், குழாய்கள் மூலம் நேரடியாகக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என 2019ல் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு, சுத்தமான குடிநீர் தருவதற்கான ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2024ஆம் ஆண்டுக்குள் ஜல் ஜீவன் திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் 2028ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜல் ஜீவன் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கம் மற்றும் சிக்கல்கள் குறித்து ஆராய கடந்த மே மாதம் 100 சிறப்புக்குழுக்களை மத்திய அரசு நியமித்தது. அதன்படி, 29 மாநிலங்களில் ஆய்வு செய்த சிறப்புக் குழுக்கள், திட்டம் தாமதம் ஆவதற்காகக் காரணங்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

சமீபத்தில், பிரதமர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சிறப்புக் குழுக்கள் தயாரித்த அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அதில், தரம் குறைவாகப் பணி நடந்ததால் நிதியை அதிகாரிகள் நிறுத்தி வைத்திருப்பதையும், கூடுதல் விலைபோட்டு ரசீதுகள் போடப்பட்டிருப்பது போன்ற விஷயங்களும் சுட்டிக்காட்டப்பட்டன.

இதனை தொடர்ந்து, சிறிய அளவில் கூடக் குறைகளோ, புகார்களோ இருக்குமேயானால், ஒப்பந்ததாரர்களுக்கு தர வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக நிறுத்தி வைக்கும்படி அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், திட்டப்பணிகளை திரும்பத் திரும்ப ஆய்வு செய்ய வேண்டும் என்றும், உரிய காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள தரத்துடன் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Tags: PM Modimodi news todayPrime Minister Modi orders action to top officials of the central government
Share
Tweet
SendShare
Previous Post

தனியார் பல் மருத்துவமனை சேதம் – நாமக்கல் தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

Next Post

மகாராஷ்டிரா : ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு – கொள்ளையனை துரிதமாக பிடித்த ராணுவ வீரர், ரயில்வே போலீசார்!

Related News

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்!

அறங்காவலர் தேர்வு குழுவில் அர்ச்சனா கல்பாத்தி; தமிழக அரசு அறிவிப்பு

உத்தரப்பிரதேசத்தில் கனமழை – கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வு!

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்!

பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies