மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய "சிப்" - மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!
Oct 4, 2025, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

Web Desk by Web Desk
Oct 4, 2025, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 11 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் மின்னணு உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய முதலீட்டு திட்டங்கள் அரசுக்கு வந்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு

ஒரு மாதத்துக்கு முன், ‘செமிகான் இந்தியா 2025’ தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, செமிகண்டக்டர் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில் 18 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள 10 செமிகண்டக்டர் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், இந்தியாவின் மிகச்சிறிய சிப், உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

மேலும், ஒற்றைச் சாளர அனுமதி, செமிகண்டக்டர் பூங்காக்களுக்கான ‘Plug and Play’ உட்கட்டமைப்புகள், திறமையான தொழிலாளர் தொகுப்பு, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள், வடிவமைப்புடன் இணைக்கப்பட்ட மானியங்கள் மற்றும் முழுமையான திறன்களை மேம்படுத்தும் திட்டங்களை மேற்கோள் காட்டி உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு வலுவான அழைப்பு விடுத்திருந்தார் பிரதமர் மோடி.

இந்த நிலையில், செமிகண்டக்டர் அல்லாத மின்னணு உதிரி பாகங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தும் திட்டத்துக்குக் கடந்த மார்ச் 28ஆம் தேதிபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி எதிர்கால மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தை (ECMS) அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்தது. 59,350 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பது, 4,56,500 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியை விரிவாக்குவது, 91,600 பேருக்குக் கூடுதல் நேரடி வேலைவாய்ப்பு மற்றும் பல மறைமுக வேலைகளை உருவாக்குவது ஆகியவை இந்தத் திட்டத்தின் அடிப்படை யாகும்.

இறக்குமதி சார்புநிலையைக் குறைத்து, தொழில்துறையின் அடித்தளத்தை வலிமையடையதாக்கும் வகையில், நாட்டில் மின்னணு கூறுகளை உற்பத்தி செய்வதற்கான வலுவான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் முதல் நோக்கமாகும். உள்நாட்டு உற்பத்தித் துறையைச் சர்வதேச விநியோகச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் உலகளாவிய மின்னணு வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கை விரிவுபடுத்துவது இத்திட்டத்தின் இரண்டாவது நோக்கமாகும்.

மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டத்தில், A, B, C மற்றும் E பிரிவுக்கான விண்ணப்ப காலக்கெடு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 1,15,351 கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்களுக்கான 249 விண்ணப்பங்களை அரசு பெற்றுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

D பிரிவுக்கான சாளரம் 2027 ஏப்ரல் 30ஆம் தேதி வரைக்கும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் அதிகமான விண்ணப்பங்கள், எதிர்பார்க்காத அளவுக்கும் மேல் முன்மொழியப்பட்ட முதலீடுகளின் மதிப்பு, ஆகியவை, இந்தியாவின் நிலையான அரசு மற்றும் வெளிப்படையான கொள்கை முடிவு குறித்த முதலீட்டாளர்களின் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. திட்டமிடப்பட்ட 91,600 நபர்களுக்கான வேலைவாய்ப்பு என்ற இலக்குடன் ஒப்பிடும்போது, ​சுமார் 1.41 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் உறுதியளித்துள்ளார்.

2015-ம் நிதியாண்டில் 1.90 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையதாக இருந்த இந்தியாவின் மின்னணு பொருட்கள் உற்பத்தி கடந்த நிதியாண்டில் 11.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், ஆறு மடங்கு வளர்ந்துள்ளது. இந்நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய உள்நாட்டு மின்னணு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதுதான் பிரதமரின் மோடியின் தொலைநோக்கு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: A small "chip" that will make a big difference - India is ahead in electronics manufacturingசிப்மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியாPM ModiIndiaஅஸ்வினி வைஷ்ணவ்
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா : ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு – கொள்ளையனை துரிதமாக பிடித்த ராணுவ வீரர், ரயில்வே போலீசார்!

Next Post

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

Related News

கனடாவில் தெற்கு ஆசிய படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடமிருந்து பறிக்கப்பட்ட உடைகள், ஆயுதங்கள் விற்பனை!

இஸ்ரேல் அரசு நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம்!

மடகாஸ்கர் : அதிபர் பதவி விலக கோரி GEN Z போராட்டம் – 22 பேர் பலி!

மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசின் மானிய விலை உரங்களை லாரியில் கடத்திய அதிகாரிகள்!

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி!

கடலூர் : சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீட்டின் மீது இடிவிழுந்ததில் மின்சாதன பொருட்கள் சேதம்!

ஹமாஸ் அமைப்புக்கு இறுதி கெடு விதித்த டிரம்ப்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

இந்தோனேசியா : மதப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 13 பேர் பலி!

சீன ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்கு லிண்டா நோஸ்கோவா தகுதி!

சீனா : ஏஐ ரோபோ கண்காட்சி – குவிந்த பார்வையாளர்கள்!

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?

புதுக்கோட்டை : சமாதி இடத்தை வீட்டுமனை பட்டாவாக வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies