விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்த இருவரின் காம்போவும், காதல் காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது மட்டுமின்றி நல்ல வரவேற்பையும் பெற்றன.
இதனிடையே இருவரும் ஒன்றாக வெளியே சென்ற புகைப்படங்களும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் இல்லத்தில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும், பிப்ரவரியில் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.