பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி - பின்னணியில் பாக். உளவு அமைப்பு!
Jan 14, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

Murugesan M by Murugesan M
Oct 6, 2025, 09:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் தொண்டு நிறுவனங்களின் நிதி, பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து விவரிக்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

கனடாவில் Khalsa Aid, Sikh Relief, World Sikh Organisation போன்ற பெயர்களில் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்கள், பயங்கரவாத செயலுக்குத் துணை போவது அண்மையில் கண்டறியப்பட்டது.

சீக்கிய மக்களின் நலனுக்காக இயங்கி வருவதாக முகமூடி போட்டுக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு, நிதிஉதவி அளித்தது வெட்ட வெளிச்சமானது.

Babbar Khalsa International மற்றும் Khalistan Tiger Force போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு, இது போன்ற தொண்டு நிறுவனங்களே அடிநாதம் என்பது உறுதியானது. இதனையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய கனடா உளவுத்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

கனடாவில் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களின் நிதி, ஹவாலா மூலமாகவோ, கிரிப்டோ மூலமாகவோ காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. நல்ல வேலை…. உண்மை இப்போதாவது புலப்பட்டதே என அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள்.

மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் அவர்களுக்குக் கிடைத்தது. அது என்னவென்றால்… பாகிஸ்தான் உளவுத்துறை இதற்குப் பின்னணியில் இருப்பது தான். கனடாவில், காலிஸ்தான் ஆதரவு நிலைபாட்டோடு செயல்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு எங்கிருந்து நிதி வந்தது எனத் தோண்டி துருவிய போது, அதிகாரிகளுக்கு ஓர் உண்மை புலப்பட்டது.

பேரிடர் கால நிதியாகச் சில அறக்கட்டளை நிறுவனங்களிடமிருந்து தொடர்ச்சியாகப் பண பரிவர்த்தனை நடந்திருக்க, சந்தேகம் வலுத்தது. பேரிடர் காலத்திற்கென இவ்வளவு நிதியுதவி வழங்குவார்களா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட, பின்னணியில் ஒளிந்திருந்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, வசமாக மாட்டிக்கொண்டது.

இதுமட்டுமல்ல, சில இஸ்லாமிய அமைப்புகளும் தங்களது தொண்டு நிறுவனங்களின் நிதியை, பயங்கரவாத சக்திகளுக்குத் தாரை வார்த்துள்ளன. காசா, காஷ்மீர், ரோகிங்கியா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக நிதியை வசூலித்துவிட்டு, அதனை அல்-கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா, ஐஎஸ்ஐஎஸ், ஹமாஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு வாரி வாரி வழங்கியுள்ளன.

அப்பாவி மக்களுக்கு உதவி புரிவதாக வேஷமிட்டு, பயங்கரவாத சக்திகளுக்குத் துணைபோன தொண்டு நிறுவனங்களின் உண்மைமுகம் உலகிற்கு தெரியவந்திருந்தாலும், இந்த விவகாரத்தில் பலத்த அடி வாங்கியது பாகிஸ்தான் தான். இந்தியா என்றாலே போதும் வரிந்து கட்டிக்கொண்டு, சதி வேலையில் ஈடுபடும் பாகிஸ்தான், திருந்தாத ஜென்மம் என்பதையே மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது.

Tags: Financing of terrorism from Canada - Pak. Intelligence organization behind itகனடாவில் இருந்து நிதியுதவிபாக். உளவு அமைப்புpakistanCanada
ShareTweetSendShare
Previous Post

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

Next Post

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies