பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி - பின்னணியில் பாக். உளவு அமைப்பு!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

Murugesan M by Murugesan M
Oct 6, 2025, 09:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் தொண்டு நிறுவனங்களின் நிதி, பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து விவரிக்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

கனடாவில் Khalsa Aid, Sikh Relief, World Sikh Organisation போன்ற பெயர்களில் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்கள், பயங்கரவாத செயலுக்குத் துணை போவது அண்மையில் கண்டறியப்பட்டது.

சீக்கிய மக்களின் நலனுக்காக இயங்கி வருவதாக முகமூடி போட்டுக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு, நிதிஉதவி அளித்தது வெட்ட வெளிச்சமானது.

Babbar Khalsa International மற்றும் Khalistan Tiger Force போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு, இது போன்ற தொண்டு நிறுவனங்களே அடிநாதம் என்பது உறுதியானது. இதனையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய கனடா உளவுத்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

கனடாவில் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களின் நிதி, ஹவாலா மூலமாகவோ, கிரிப்டோ மூலமாகவோ காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. நல்ல வேலை…. உண்மை இப்போதாவது புலப்பட்டதே என அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள்.

மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் அவர்களுக்குக் கிடைத்தது. அது என்னவென்றால்… பாகிஸ்தான் உளவுத்துறை இதற்குப் பின்னணியில் இருப்பது தான். கனடாவில், காலிஸ்தான் ஆதரவு நிலைபாட்டோடு செயல்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு எங்கிருந்து நிதி வந்தது எனத் தோண்டி துருவிய போது, அதிகாரிகளுக்கு ஓர் உண்மை புலப்பட்டது.

பேரிடர் கால நிதியாகச் சில அறக்கட்டளை நிறுவனங்களிடமிருந்து தொடர்ச்சியாகப் பண பரிவர்த்தனை நடந்திருக்க, சந்தேகம் வலுத்தது. பேரிடர் காலத்திற்கென இவ்வளவு நிதியுதவி வழங்குவார்களா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட, பின்னணியில் ஒளிந்திருந்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, வசமாக மாட்டிக்கொண்டது.

இதுமட்டுமல்ல, சில இஸ்லாமிய அமைப்புகளும் தங்களது தொண்டு நிறுவனங்களின் நிதியை, பயங்கரவாத சக்திகளுக்குத் தாரை வார்த்துள்ளன. காசா, காஷ்மீர், ரோகிங்கியா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக நிதியை வசூலித்துவிட்டு, அதனை அல்-கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா, ஐஎஸ்ஐஎஸ், ஹமாஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு வாரி வாரி வழங்கியுள்ளன.

அப்பாவி மக்களுக்கு உதவி புரிவதாக வேஷமிட்டு, பயங்கரவாத சக்திகளுக்குத் துணைபோன தொண்டு நிறுவனங்களின் உண்மைமுகம் உலகிற்கு தெரியவந்திருந்தாலும், இந்த விவகாரத்தில் பலத்த அடி வாங்கியது பாகிஸ்தான் தான். இந்தியா என்றாலே போதும் வரிந்து கட்டிக்கொண்டு, சதி வேலையில் ஈடுபடும் பாகிஸ்தான், திருந்தாத ஜென்மம் என்பதையே மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது.

Tags: pakistanCanadaFinancing of terrorism from Canada - Pak. Intelligence organization behind itகனடாவில் இருந்து நிதியுதவிபாக். உளவு அமைப்பு
Share
Tweet
SendShare
Previous Post

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

Next Post

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies