கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!
Oct 6, 2025, 07:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

Web Desk by Web Desk
Oct 6, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படக்கூடிய புற்றுநோயைப் புதிய ரத்த பரிசோதனைமூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியலாம் என்ற தகவல் மருத்துவ உலகில் புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் பரவலை குறைக்க முடியும் என்று கூறுகின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள்… அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

அமெரிக்காவில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு HPV வைரஸே 70 சதவிகித காரணமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ்தான் பொதுவான புற்றுநோய்க்கும் காரணமாகிறது… எனினும் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்களுக்கான ஸ்கிரீனிங் சோதனை எதுவும் இல்லை என்றே கூறப்படுகிறது.

இந்தப் பிரச்னைக்கு முடிவுக்கட்ட, அறிகுறிகள் தென்படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தலை, கழுத்து புற்றுநோய்களைக் கண்டறிய உதவும் புதிய இரத்த பரிசோதனையை உருவாக்கியிருக்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

HPV-DeepSeek எனப்படும் ஒரு புதிய திரவ பயாப்ஸி சோதனையை உருவாக்கியிருக்கும் அவர்கள், தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களை அறிகுறிகள் தெரிவதற்கு முன்பே கண்டறிய முடியும் என்கிறார்கள்.

புற்றுநோய்களை முன்கூட்டியே அறிவதன் மூலம், குறைவான அல்லது தீவிர சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் புற்றுநோயிலிருந்து விடுபடலாம் என்று கூறும் Harvard-affiliated Mass General Brigham ஆராய்ச்சியாளர்கள், தங்களது கண்டுபிடிப்பை Journal of the National Cancer Institute இதழில் வெளியிட்டுள்ளனர்.

இதன் மூலம் புற்றுநோய் அறிகுறியற்ற நபர்களிடம் HPV தொடர்புடைய புற்றுநோய்களைத் துல்லியமாக கண்டறிய முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்… புற்றுநோயின் அறிகுறிகளுடன் நோயாளிகள் மருத்துவமனைகளுக்குள் நுழையும் தருணத்தில், அவர்களுக்குக் குறிப்பிடத் தக்க, வாழ்நாள் முழுவதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

HPV-DeepSeek போன்ற கருவிகள் இந்தப் புற்றுநோய்களை அவற்றின் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய உதவுவதோடு, இறுதியில் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நோயறிதலுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை HPV-DeepSeek கருவிமூலம் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, 28 புற்றுநோய்களில் 27 புற்றுநோய்களைத் துல்லியமாகக் காட்டியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கண்டுபிடிப்பு பரவலாக நடைமுறைக்கு வரும்பட்சத்தில், புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று நம்பலாம்.

Tags: Cancer Center HospitalCancer symptoms can be detected early: New blood test to be introducedஅறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை
ShareTweetSendShare
Previous Post

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

Related News

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

Load More

அண்மைச் செய்திகள்

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் – தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies