பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த "கோல்ட்ரிப்" - தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

Murugesan M by Murugesan M
Oct 6, 2025, 07:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய பிரதேசத்தில், கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பூதாகரமான நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களும், தரமற்ற மருந்துக்குத் தடை விதித்துள்ளன. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…

மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்த 10 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குஐராத் மாநிலத்திலும் ஒரு குழந்தை உயிரை விட, இனியொரு சம்பவம் நடந்து விடக் கூடாது எனச் சுகாதாரத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியது.

பெரும்பாலான குழந்தைகள் 7 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்ததால், இக்கொடூர சம்பவம் மக்களை கவலையில் ஆழ்த்தியது. குழந்தைகள் அனைவரும், கோல்ட்ரிப் எனும் இருமல் மருந்தைக் குடித்திருப்பது விசாரணையில் தெரியவர, உயிரை குடித்தது அந்த மருந்து தானா? என ஆராயப்பட்டது.

குழந்தைகளின் சிறுநீரக திசுவில் டை எத்திலின் கிளைக்கால் எனப்படும் கொடிய வேதிப்பொருள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதால், கோல்ட்ரிப் என்பது இருமல் மருந்து அல்ல, விஷ மருந்து என்பது திட்டவட்டமானது. இந்தச் சம்பவத்தில் மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால்.

கோல்ட்ரிப் மருந்து தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது தான். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரத்தில் இயங்கும் ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தில் கோல்ட்ரிப் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவர, அந்நிறுவனத்தில் இருந்து விநியோகிக்கப்பட்ட ஒட்டுமொத்த மருந்துகளுக்கும் மத்திய பிரதேச அரசு தடைவிதித்துள்ளது.

அதுமட்டுமல்ல, ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிந்து உயிரிழந்த குழந்தைகளுக்கு நீதி கேட்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது மத்திய பிரதேச அரசு. மேலும் கோல்ட்ரிப் மருந்தை குழந்தைகளுக்குப் பரிந்துரைத்த மருத்துவரையும் அதிரடியாகக் கைது செய்திருக்கிறது.

பிஞ்சுக் குழந்தைகள் உயிரை விட்ட சம்பவம், நாடு முழுவதும் பூதாகரமான நிலையில், பல்வேறு மாநில அரசுகள் அலர்ட் ஆகி இருக்கின்றன. மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களும் கோல்ட்ரிப் மருந்துக்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளன.

மருந்தகங்களில் இருக்கும் கோல்ட்ரிப் ஸ்டாக் அனைத்தும் உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனிடையே, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளுக்கு முடிந்த வரையில், சிரப் பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெரியவர்களின் சிறுநீரகம் முதிர்ச்சி அடைந்திருக்கும். ஆனால், குழந்தைகளுக்குச் சிறுநீரகம் முழுமையாக முதிர்ச்சி அடைந்திருக்காது என்பதால் மருத்துவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags: தரமற்ற மருந்துக்கு தடைKeralaTamil Nadu"Goldtrip" that took the lives of unborn children - Tamil Nadu and Kerala have banned the substandard drug!கோல்ட்ரிப் இருமல் மருந்து
Share
Tweet
SendShare
Previous Post

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

Next Post

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies