பெர்ஃபியூமை ஓபியமாக கருதியதால் வந்த சோதனை : அமெரிக்க போலீசாரின் கைதால் பரிதவிக்கும் இந்தியரின் குடும்பம்!
Jan 14, 2026, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெர்ஃபியூமை ஓபியமாக கருதியதால் வந்த சோதனை : அமெரிக்க போலீசாரின் கைதால் பரிதவிக்கும் இந்தியரின் குடும்பம்!

Murugesan M by Murugesan M
Oct 8, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் பெர்ஃபியூமை போதைப்பொருள் எனக் கருதி தவறுதலாகக் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நாடு கடத்தப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். போலீசார் அவரைக் கைது செய்தது எப்படி, பின்னணி என்பது குறித்து பார்க்கலாம்.

அமெரிக்காவின் ஆர்கன்சாஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கபில் ரகு என்பவர், அமெரிக்க குடியுரிமை பெற்ற பெண்ணை மணந்து நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். மே மூன்றாம் தேதி அப்படியொரு சம்பவம் நடக்கும் என்று கபில் ரகு எதிர்பார்க்கவில்லை.

போக்குவரத்து விதிமீறலுக்காகப் பெண்டன் போலீசாரிடம் சிக்கியதுதான் தாமதம்… அவரது காரில் ஒபியம் என்ற பெயரிடப்பட்ட பெர்ஃபியூமை கைப்பற்றிய போலீசார், போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி சந்தேகத்தின் அடிப்படையில் கபில் ரகுவை அதிரடியாகக் கைது செய்தினர்.

ஒபியம் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டபோது, அது ஒபியம் இல்லை பெர்ஃபியூம்தான் என்று ரகு விளக்கியபோதும் போலீசார் அதனை நம்பவில்லை. மூன்று நாட்கள் சலைன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க தடுப்பு மையத்தில் 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார் கபில் ரகு.

போதைப்பொருள் குற்றச்சாட்டு அவர் மீது இருக்க, குடியேற்ற ஆவணங்களில் ஒரு சிக்கலைக் குறிப்பிட்டு விசாவை அதிகாரிகள் ரத்து செய்திருக்கிறார்கள். மே 20ம் தேதி மாவட்ட நீதிமன்றத்தால் போதைப்பொருள் குற்றச்சாட்டு கைவிடப்பட்ட போதிலும், ரகுவின் தடுப்புக்காவலின்போது அவரது விசா ரத்து செய்யப்பட்டிருப்பது, அமெரிக்காவில் அவரது சட்டப்பூர்வ அந்தஸ்தை கடுமையாகப் பாதித்தது.

ரகு வைத்திருந்தது ஒபியம் இல்லை, சாதாரண பெர்ஃபியூம்தான் என்று உறுதிபடுத்தப்பட்ட பின்னரும், அவரது விசா ரத்து செய்யப்பட்டிருப்பது நிர்வாகப் பிழை என்று அவரது வழக்கறிஞர் கூறுகிறார். தற்பாது நாடுகடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ள கபில் ரகு, அங்கு வேலை செய்ய முடியாததால், கடுமையான நிதி நெருக்கடி மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்… இந்த நிலையில், தனது விசா பிரச்னைக்குத் தீர்வுகாணும் முயற்சியில் கபில் ரகு ஈடுபட்டிருக்கிறார். சட்டக் கட்டணங்கள் அதிகரிப்பு, நிதியுதவி பெற முடியாத சூழல் போன்றவை ரகுவை கடினமாகச் சூழலுக்குத் தள்ளியிருக்கிறது. ICE-ஐ மேற்பார்வையிடும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, இந்த வழக்குகுறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டினருக்கு சட்ட மற்றும் தூதரக ஆதரவை உறுதி செய்யும் வியன்னா மாநாட்டு விதிமுறையின் கீழ், இந்திய துணைத் தூதரகத்திற்கு அறிவிக்காமல் பெண்டன் காவல்துறை சட்டம் மற்றும் கொள்கை இரண்டையும் மீறியதாக ரகுவின் வழக்கறிஞர் கூறியதாகத் தி சலைன் கூரியர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தர்மசங்கடமான நிலைமை குடும்பத்தை மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது என்று ரகுவின் மனைவி ஆல்லி மேஸ் கூறியிருக்கிறார். காலம் கடந்து கொண்டிருக்கும் நிலையில், கபில் ரகுவுக்கு நியாயம் கிடைக்குமா என்பதே அனைவரது கேள்வி.

Tags: americausaAn Indian man's family grieves over his arrest by American police after being tested for considering perfume as opium
ShareTweetSendShare
Previous Post

மதுரை : ஊராட்சி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு!

Next Post

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த நேரம் இது – பிரதமர் மோடி

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies