பெர்ஃபியூமை ஓபியமாக கருதியதால் வந்த சோதனை : அமெரிக்க போலீசாரின் கைதால் பரிதவிக்கும் இந்தியரின் குடும்பம்!
Jun 23, 2026, 03:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெர்ஃபியூமை ஓபியமாக கருதியதால் வந்த சோதனை : அமெரிக்க போலீசாரின் கைதால் பரிதவிக்கும் இந்தியரின் குடும்பம்!

Murugesan M by Murugesan M
Oct 8, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் பெர்ஃபியூமை போதைப்பொருள் எனக் கருதி தவறுதலாகக் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நாடு கடத்தப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். போலீசார் அவரைக் கைது செய்தது எப்படி, பின்னணி என்பது குறித்து பார்க்கலாம்.

அமெரிக்காவின் ஆர்கன்சாஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கபில் ரகு என்பவர், அமெரிக்க குடியுரிமை பெற்ற பெண்ணை மணந்து நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். மே மூன்றாம் தேதி அப்படியொரு சம்பவம் நடக்கும் என்று கபில் ரகு எதிர்பார்க்கவில்லை.

போக்குவரத்து விதிமீறலுக்காகப் பெண்டன் போலீசாரிடம் சிக்கியதுதான் தாமதம்… அவரது காரில் ஒபியம் என்ற பெயரிடப்பட்ட பெர்ஃபியூமை கைப்பற்றிய போலீசார், போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி சந்தேகத்தின் அடிப்படையில் கபில் ரகுவை அதிரடியாகக் கைது செய்தினர்.

ஒபியம் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டபோது, அது ஒபியம் இல்லை பெர்ஃபியூம்தான் என்று ரகு விளக்கியபோதும் போலீசார் அதனை நம்பவில்லை. மூன்று நாட்கள் சலைன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க தடுப்பு மையத்தில் 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார் கபில் ரகு.

போதைப்பொருள் குற்றச்சாட்டு அவர் மீது இருக்க, குடியேற்ற ஆவணங்களில் ஒரு சிக்கலைக் குறிப்பிட்டு விசாவை அதிகாரிகள் ரத்து செய்திருக்கிறார்கள். மே 20ம் தேதி மாவட்ட நீதிமன்றத்தால் போதைப்பொருள் குற்றச்சாட்டு கைவிடப்பட்ட போதிலும், ரகுவின் தடுப்புக்காவலின்போது அவரது விசா ரத்து செய்யப்பட்டிருப்பது, அமெரிக்காவில் அவரது சட்டப்பூர்வ அந்தஸ்தை கடுமையாகப் பாதித்தது.

ரகு வைத்திருந்தது ஒபியம் இல்லை, சாதாரண பெர்ஃபியூம்தான் என்று உறுதிபடுத்தப்பட்ட பின்னரும், அவரது விசா ரத்து செய்யப்பட்டிருப்பது நிர்வாகப் பிழை என்று அவரது வழக்கறிஞர் கூறுகிறார். தற்பாது நாடுகடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ள கபில் ரகு, அங்கு வேலை செய்ய முடியாததால், கடுமையான நிதி நெருக்கடி மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்… இந்த நிலையில், தனது விசா பிரச்னைக்குத் தீர்வுகாணும் முயற்சியில் கபில் ரகு ஈடுபட்டிருக்கிறார். சட்டக் கட்டணங்கள் அதிகரிப்பு, நிதியுதவி பெற முடியாத சூழல் போன்றவை ரகுவை கடினமாகச் சூழலுக்குத் தள்ளியிருக்கிறது. ICE-ஐ மேற்பார்வையிடும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, இந்த வழக்குகுறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டினருக்கு சட்ட மற்றும் தூதரக ஆதரவை உறுதி செய்யும் வியன்னா மாநாட்டு விதிமுறையின் கீழ், இந்திய துணைத் தூதரகத்திற்கு அறிவிக்காமல் பெண்டன் காவல்துறை சட்டம் மற்றும் கொள்கை இரண்டையும் மீறியதாக ரகுவின் வழக்கறிஞர் கூறியதாகத் தி சலைன் கூரியர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தர்மசங்கடமான நிலைமை குடும்பத்தை மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது என்று ரகுவின் மனைவி ஆல்லி மேஸ் கூறியிருக்கிறார். காலம் கடந்து கொண்டிருக்கும் நிலையில், கபில் ரகுவுக்கு நியாயம் கிடைக்குமா என்பதே அனைவரது கேள்வி.

Tags: americausaAn Indian man's family grieves over his arrest by American police after being tested for considering perfume as opium
ShareTweetSendShare
Previous Post

மதுரை : ஊராட்சி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு!

Next Post

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த நேரம் இது – பிரதமர் மோடி

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies