தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் முற்றிலுமாக இடிந்த நிலையில் காணப்படுவதாகவும், கழிவுநீர் கலப்பதாகவும் கூறும் அவர்கள், தெப்பக்குளத்தை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்தும் முறையான நடவடிக்கை இல்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.