மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு, 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை திடியூர் பகுதியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் 15-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களின் ரத்த மாதிரிகள், குடிநீர் மாதிரிகளை சோதனை செய்ததில் விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவக்கூடிய ‘எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மாணவர்களுக்குக் குடிநீர், உணவுகள் உள்ளிட்ட அனைத்தும் சுகாதாரமான முறையில் ஏற்பாடு செய்யும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தினர் தேதி குறிப்பிடாமல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இதனை அடுத்து, தனியார் கல்லூரியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, உணவுக் கூடம் சுதாரமற்ற முறையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உணவுக் கூடத்துக்கான சான்றிதழைத் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.