வெனிசுலா பெண்மணிக்கு "அமைதிக்கான நோபல் பரிசு" : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!
Jan 14, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

Murugesan M by Murugesan M
Oct 10, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினோ மச்சாடேவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 8 போர்களை நிறுத்தியதாக அடம்பிடித்த ட்ரம்புக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. விரிவார பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது போராடி, சர்வாதிகாரத்திற்கு சிறிதும் அஞ்சாமல் தைரியமாகக் குரல் கொடுக்கும் மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எட்டு போரை நிறுத்தியிருக்கிறேன்… எனக்குத் தான் பரிசு வேண்டும் என அடம்பிடிக்க எதிர்பார்ப்பு எகிறியது.

அதுவும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட ஒப்பந்தம், பரிசு அறிவிப்பதற்கு ஒருநாள் முன்னதாகக் கையெழுத்தாகி இருக்க, யாருக்கு நோபல் பரிசு என்பது உலகம் முழுவதும் பேசுபொருளானது. ஆனால், நோபல் பரிசு தேர்வுக்குழு, ட்ரம்ப்பின் பேச்சையெல்லாம் காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை.

என்னவேண்டுமானாலும் கூறுங்கள்… ரூல்ஸ்னா ரூல்ஸ் தான் என மரியா கொரினா மச்சாடோவை தேர்வு செய்திருக்கிறார்கள். தி நார்வேஜியன் நோபல் கமிட்டி தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரிட்நெஸிடம் ட்ரம்புக்கு ஏன் விருது அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியபோது, தேர்வுக்குழுவினர் அமர்ந்திருந்த அறை, தைரியம் மற்றும் நேர்மை ஆகியவற்றால் நிரம்பி வழிந்ததாகச் சூசகமாகப் பதிலளித்தார்.

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பானது அதிபர் ட்ரம்புக்கு நிச்சயம் ஏமாற்றமே. ஆனால், வெனிசுலாவில் சர்வாதிகாரம் துடைத்தெறியப்பட வேண்டும்… மக்களாட்சி மலர வேண்டும் என்பதே அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாடு.

எனவே மரியா கொரினா மச்சாடோவுக்கு பரிசு கிடைத்ததை ட்ரம்புக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருத முடியாது என்ற ஆதரவு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்தியதற்கு முன்னரே, மரியா கொரினா மச்சாடோ நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டதால், ட்ரம்புக்கு அடுத்த ஆண்டு வழங்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

இது ஒருபுறம் இருக்க இன்னும் எத்தனை போர்களை நிறுத்தினால் நோபல் பரிசு கிடைக்குமோ என்ற கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கிறார் டொனால்டு ட்ரம்ப்.

Tags: usanobal prizeDonald TrumpVenezuelan woman awarded Nobel Peace Prize: Trump disappointed with snubவெனிசுலா பெண்மணிக்கு "அமைதிக்கான நோபல் பரிசு
ShareTweetSendShare
Previous Post

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

Next Post

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies