தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!
Jan 14, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

Murugesan M by Murugesan M
Oct 19, 2025, 06:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகைக்காகத் தயாரிக்கப்படும் செட்டிநாட்டு பலகாரங்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் பலகாரங்கள் தயாரிப்பு பணியில் பெண்கள் மட்டுமே ஈடுபடுவதும் தனிச்சிறப்பாக இருக்கிறது. அதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்….

தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைகளுக்கு அடுத்து பலகாரங்களே முக்கிய இடம் வகிக்கின்றன. அதிலும் செட்டிநாடு பலகாரங்களுக்கு என்று தனி மவுசே உள்ளது.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை கிராமமானது காரைக்குடிக்கு அடுத்தபடியாக நகரத்தார் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது.

இங்குச் செட்டிநாடு கட்டிட கலையின் அடிப்படையில் கட்டப்பட்ட நேர்த்தியான தெருக்களுடன் கூடிய கட்டிடங்களை ஏராளமாகக் காணலாம். அத்துடன் அவர்களின் பாரம்பரியம் மாறாத செட்டிநாடு பலகாரங்கள் தயாரிக்கப்படும் பணிகளும் இக்கிராமத்தில்தான் களைகட்டியுள்ளன.

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் நகரத்தார் சமூக மக்கள் ஈடுபட்டுள்ளனர். அதிலும் பெண்களை மட்டுமே கொண்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

12 ஆண்டுகளுக்கும் மேலாகச் செட்டிநாடு பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் இவர்கள் தேன்குழல், அதிரசம், பால்முருக்கு, கைமுருக்கு, காரமுருக்கு, சீடை, கார சீடை, உப்பு சீடை, இனிப்பு சீடை, மனவல்லம், தட்டை, காராச்சேவு, ரிப்பன் சேவு, மிக்சர், லட்டு, பூந்தி, மைசூர்பாக், கடலை மாவுருண்டை என 17 வகையான பலகாரங்களை சுத்தமான நெய், எண்ணெய் உள்ளிட்டவை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கின்றனர்.

பாரம்பரிய சுவை மாறாமலும் பலகாரங்கள் சுடச்சுட ரெடியாகின்றன. பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் பெண்கள் மட்டுமே முழுமையாக ஈடுபட்டு வருவதால் வீடுகளில் தயார் செய்வதைபோலவே சுவை மற்றும் உடல் உபாதைகள் ஏற்படாத வண்ணம் அக்கறையுடன் தயாரிக்கப்படுவதாகக் கூறுகின்றனர் இப்பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

தீபாவளிக்காக மட்டுமல்லாமல் வீட்டு விசேஷங்களுக்காகவும் பலகாரங்களை தயார் செய்வதால் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து பலகாரங்களை வாங்கி செல்கின்றனர்.

வெளிநாடுகளில் இருக்கும் தங்களது சொந்தங்களுக்கும் இந்தப் பலகாரங்களை அனுப்பி வைக்கின்றனர். பெண்களால் மட்டுமே தயாரிக்கப்படும் இந்தச் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளியை செட்டிநாட்டு பலகாரங்களுடன் கொண்டாட ஏராளமானோர் தயாராகி வருகின்றனர்.

Tags: Diwaliதீபாவளிசெட்டிநாட்டு பலகாரங்கள்!Chettinad delicacies ready for Diwali!
ShareTweetSendShare
Previous Post

சுடச்சுட தீபாவளி பலகாரங்கள் – தயாரிக்கும் 500 பெண்கள்!

Next Post

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies