தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!
Oct 11, 2025, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

Web Desk by Web Desk
Oct 11, 2025, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகைக்காகத் தயாரிக்கப்படும் செட்டிநாட்டு பலகாரங்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் பலகாரங்கள் தயாரிப்பு பணியில் பெண்கள் மட்டுமே ஈடுபடுவதும் தனிச்சிறப்பாக இருக்கிறது. அதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்….

தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைகளுக்கு அடுத்து பலகாரங்களே முக்கிய இடம் வகிக்கின்றன. அதிலும் செட்டிநாடு பலகாரங்களுக்கு என்று தனி மவுசே உள்ளது.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை கிராமமானது காரைக்குடிக்கு அடுத்தபடியாக நகரத்தார் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது.

இங்குச் செட்டிநாடு கட்டிட கலையின் அடிப்படையில் கட்டப்பட்ட நேர்த்தியான தெருக்களுடன் கூடிய கட்டிடங்களை ஏராளமாகக் காணலாம். அத்துடன் அவர்களின் பாரம்பரியம் மாறாத செட்டிநாடு பலகாரங்கள் தயாரிக்கப்படும் பணிகளும் இக்கிராமத்தில்தான் களைகட்டியுள்ளன.

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் நகரத்தார் சமூக மக்கள் ஈடுபட்டுள்ளனர். அதிலும் பெண்களை மட்டுமே கொண்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

12 ஆண்டுகளுக்கும் மேலாகச் செட்டிநாடு பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் இவர்கள் தேன்குழல், அதிரசம், பால்முருக்கு, கைமுருக்கு, காரமுருக்கு, சீடை, கார சீடை, உப்பு சீடை, இனிப்பு சீடை, மனவல்லம், தட்டை, காராச்சேவு, ரிப்பன் சேவு, மிக்சர், லட்டு, பூந்தி, மைசூர்பாக், கடலை மாவுருண்டை என 17 வகையான பலகாரங்களை சுத்தமான நெய், எண்ணெய் உள்ளிட்டவை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கின்றனர்.

பாரம்பரிய சுவை மாறாமலும் பலகாரங்கள் சுடச்சுட ரெடியாகின்றன. பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் பெண்கள் மட்டுமே முழுமையாக ஈடுபட்டு வருவதால் வீடுகளில் தயார் செய்வதைபோலவே சுவை மற்றும் உடல் உபாதைகள் ஏற்படாத வண்ணம் அக்கறையுடன் தயாரிக்கப்படுவதாகக் கூறுகின்றனர் இப்பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

தீபாவளிக்காக மட்டுமல்லாமல் வீட்டு விசேஷங்களுக்காகவும் பலகாரங்களை தயார் செய்வதால் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து பலகாரங்களை வாங்கி செல்கின்றனர்.

வெளிநாடுகளில் இருக்கும் தங்களது சொந்தங்களுக்கும் இந்தப் பலகாரங்களை அனுப்பி வைக்கின்றனர். பெண்களால் மட்டுமே தயாரிக்கப்படும் இந்தச் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளியை செட்டிநாட்டு பலகாரங்களுடன் கொண்டாட ஏராளமானோர் தயாராகி வருகின்றனர்.

Tags: Diwaliதீபாவளிசெட்டிநாட்டு பலகாரங்கள்!Chettinad delicacies ready for Diwali!
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

Next Post

மாநிலங்களில் கோலாகலமாக நடைபெற்ற கர்வா சவுத் விழா!

Related News

தூத்துக்குடி : காட்டுப் பன்றி தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்ற தொழிலாளி காயம்!

காசா போர் நிறுத்தம் குறித்து பேசும் முதல்வர் ஸ்டாலின் – சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? : ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

ஏற்காடு சுற்றுலா தலத்தில் டன் கணக்கில் தேங்கிய குப்பைகள்!

தீபாவளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் : இந்து மக்கள் கட்சியினர் மனு!

தூத்துக்குடி : காவல் நிலையம் முன் பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிப்பு!

கொடைக்கானல் : இரவு நேரத்தில் உலா வரும் யானைகள் – வாகன ஓட்டிகள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி – பினராயி விஜயன் சந்திப்பு!

ஆர்.எஸ்.எஸ் தடைகளை கடந்து செயல்படும் – சுனில் அம்பேகர்

ஆஸ்திரேலியா : ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்கள் எடுத்து கின்னஸ் உலக சாதனையை படைத்த பெண் காவலர்!

உத்தரப்பிரதேசம் : காதலியுடன் சாலையில் சுற்றித் திரிந்த கணவன் – காதலியை தாக்கிய மனைவி!

நாமக்கல் : அரசு பேருந்து ஓட்டுநரை போதையில் தாக்கிய இளைஞர்!

3வது காதலியை அறிமுகம் செய்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா!

190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல் உயிரினம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!

கரூர் : பெண்ணின் காம்ப்ளக்ஸை ஏமாற்றி அபகரிக்க நினைக்கும் திமுக நிர்வாகி?

நெல்லை : கல்லூரியில் இரு பிரிவுகளாக மோதிக்கொண்ட மாணவர்கள்!

தூத்துக்குடி : ஜாமினில் வெளியே வந்தவர் பழிக்குப் பழியாக கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies