OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் - ராஜ்நாத சிங்!
Jul 23, 2026, 12:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 19, 2025, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரம்மோஸ் ஏவுகணையின் எல்லைக்குள் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்… உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணையை நாட்டுக்கு அர்ப்பணித்தபோது, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கையும் விடுத்தார்…

1998ம் ஆண்டு இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்க ஒப்பந்தம் செய்ததன் விளைவாக உதித்ததுதான் பிரம்மோஸ் ஏவுகணை.. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி, ரஷ்யாவின் மோஸ்க்வா நதியின் பெயர்களை இணைத்து,, புதிய சூப்பர் சோனிக் ஏவுகணைக்கு பிரம்மோஸ் என்று பெயர்சூட்டப்பட்டது… பிரம்மனின் வலிமைமிக்க அஸ்திரமான பிரம்மாஸ்திரத்தை முன்னிறுத்தியும் இப்பெயர் தேர்வு செய்யப்பட்டது…

நீர், நிலம், வான் பரப்பு என பிரம்மோஸ் ஏவுகணைகளை எங்கிருந்தும் ஏவ முடியும்… 2005-ல் கடற்படையிலும், 2007ம் ஆண்டில் ராணுவத்திலும், 2020-ல் விமானப்படையில் சேர்க்கப்பட்ட பிரம்மோஸ் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரம்மாஸ்திரமாக செயல்பட்டு பாகிஸ்தானை அடிபணிய வைத்தது…

முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் பிரம்மோஸ் ஏவுகணைகள் நம் ராணுவ பலத்தை வலுவூட்டி வருகின்றன.. இந்நிலையில் லக்னோவின் சரோஜினி நகரில் உள்ள BrahMos Aerospace-ல் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெற்றி ஒரு அரிய நிகழ்வு அல்ல என்பதை ஆப்ரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளதாகக் கூறினார். இதன் மூலம் இந்திய ராணுவத்தின் வலிமை வெற்றியை பழக்கமாக்கும் நிலையை எட்டியிருப்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

நமது எதிரிகள் இனி பிரம்மோஸ் ஏவுகணையில் இருந்து தப்பிக்க முடியாது என்று கூறிய அவர், பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் எல்லைக்குள் உள்ளதாவும், பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்…. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை, வெறும் டிரைலர்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்…

பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பில் உள்ள லக்னோ பிரிவு, உலகம் முழுவதும் இருந்து நிபுணர்களை ஈர்க்கும் என்றும், இது பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக மாறும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

அதே நேரத்தில் லக்னோ பிரிவின் வருவாய் அடுத்த நிதியாண்டில் இருந்து மூவாயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். பிரம்மோஸ் ஏவுகணைகளின் திறன் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன..

இதன் வலிமையை புரிந்து கொண்ட இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, எகிப்து, சவுதி அரேபியா, பிரேசில் அர்ஜெண்டினா உள்ளிட்ட 17 நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது….. .

Tags: Brahmos Aerospacepakistanrussiauttar pradeshdefence minister rajnath singhbrahmos missileLucknow
ShareTweetSendShare
Previous Post

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

Next Post

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies