OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் - ராஜ்நாத சிங்!
Jun 4, 2026, 10:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 19, 2025, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரம்மோஸ் ஏவுகணையின் எல்லைக்குள் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்… உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணையை நாட்டுக்கு அர்ப்பணித்தபோது, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கையும் விடுத்தார்…

1998ம் ஆண்டு இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்க ஒப்பந்தம் செய்ததன் விளைவாக உதித்ததுதான் பிரம்மோஸ் ஏவுகணை.. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி, ரஷ்யாவின் மோஸ்க்வா நதியின் பெயர்களை இணைத்து,, புதிய சூப்பர் சோனிக் ஏவுகணைக்கு பிரம்மோஸ் என்று பெயர்சூட்டப்பட்டது… பிரம்மனின் வலிமைமிக்க அஸ்திரமான பிரம்மாஸ்திரத்தை முன்னிறுத்தியும் இப்பெயர் தேர்வு செய்யப்பட்டது…

நீர், நிலம், வான் பரப்பு என பிரம்மோஸ் ஏவுகணைகளை எங்கிருந்தும் ஏவ முடியும்… 2005-ல் கடற்படையிலும், 2007ம் ஆண்டில் ராணுவத்திலும், 2020-ல் விமானப்படையில் சேர்க்கப்பட்ட பிரம்மோஸ் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரம்மாஸ்திரமாக செயல்பட்டு பாகிஸ்தானை அடிபணிய வைத்தது…

முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் பிரம்மோஸ் ஏவுகணைகள் நம் ராணுவ பலத்தை வலுவூட்டி வருகின்றன.. இந்நிலையில் லக்னோவின் சரோஜினி நகரில் உள்ள BrahMos Aerospace-ல் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெற்றி ஒரு அரிய நிகழ்வு அல்ல என்பதை ஆப்ரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளதாகக் கூறினார். இதன் மூலம் இந்திய ராணுவத்தின் வலிமை வெற்றியை பழக்கமாக்கும் நிலையை எட்டியிருப்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

நமது எதிரிகள் இனி பிரம்மோஸ் ஏவுகணையில் இருந்து தப்பிக்க முடியாது என்று கூறிய அவர், பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் எல்லைக்குள் உள்ளதாவும், பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்…. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை, வெறும் டிரைலர்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்…

பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பில் உள்ள லக்னோ பிரிவு, உலகம் முழுவதும் இருந்து நிபுணர்களை ஈர்க்கும் என்றும், இது பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக மாறும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

அதே நேரத்தில் லக்னோ பிரிவின் வருவாய் அடுத்த நிதியாண்டில் இருந்து மூவாயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். பிரம்மோஸ் ஏவுகணைகளின் திறன் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன..

இதன் வலிமையை புரிந்து கொண்ட இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, எகிப்து, சவுதி அரேபியா, பிரேசில் அர்ஜெண்டினா உள்ளிட்ட 17 நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது….. .

Tags: defence minister rajnath singhbrahmos missileLucknowBrahmos Aerospacepakistanrussiauttar pradesh
ShareTweetSendShare
Previous Post

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

Next Post

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies