OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் - ராஜ்நாத சிங்!
Apr 20, 2026, 08:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 19, 2025, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரம்மோஸ் ஏவுகணையின் எல்லைக்குள் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்… உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணையை நாட்டுக்கு அர்ப்பணித்தபோது, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கையும் விடுத்தார்…

1998ம் ஆண்டு இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்க ஒப்பந்தம் செய்ததன் விளைவாக உதித்ததுதான் பிரம்மோஸ் ஏவுகணை.. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி, ரஷ்யாவின் மோஸ்க்வா நதியின் பெயர்களை இணைத்து,, புதிய சூப்பர் சோனிக் ஏவுகணைக்கு பிரம்மோஸ் என்று பெயர்சூட்டப்பட்டது… பிரம்மனின் வலிமைமிக்க அஸ்திரமான பிரம்மாஸ்திரத்தை முன்னிறுத்தியும் இப்பெயர் தேர்வு செய்யப்பட்டது…

நீர், நிலம், வான் பரப்பு என பிரம்மோஸ் ஏவுகணைகளை எங்கிருந்தும் ஏவ முடியும்… 2005-ல் கடற்படையிலும், 2007ம் ஆண்டில் ராணுவத்திலும், 2020-ல் விமானப்படையில் சேர்க்கப்பட்ட பிரம்மோஸ் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரம்மாஸ்திரமாக செயல்பட்டு பாகிஸ்தானை அடிபணிய வைத்தது…

முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் பிரம்மோஸ் ஏவுகணைகள் நம் ராணுவ பலத்தை வலுவூட்டி வருகின்றன.. இந்நிலையில் லக்னோவின் சரோஜினி நகரில் உள்ள BrahMos Aerospace-ல் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெற்றி ஒரு அரிய நிகழ்வு அல்ல என்பதை ஆப்ரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளதாகக் கூறினார். இதன் மூலம் இந்திய ராணுவத்தின் வலிமை வெற்றியை பழக்கமாக்கும் நிலையை எட்டியிருப்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

நமது எதிரிகள் இனி பிரம்மோஸ் ஏவுகணையில் இருந்து தப்பிக்க முடியாது என்று கூறிய அவர், பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் எல்லைக்குள் உள்ளதாவும், பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்…. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை, வெறும் டிரைலர்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்…

பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பில் உள்ள லக்னோ பிரிவு, உலகம் முழுவதும் இருந்து நிபுணர்களை ஈர்க்கும் என்றும், இது பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக மாறும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

அதே நேரத்தில் லக்னோ பிரிவின் வருவாய் அடுத்த நிதியாண்டில் இருந்து மூவாயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். பிரம்மோஸ் ஏவுகணைகளின் திறன் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன..

இதன் வலிமையை புரிந்து கொண்ட இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, எகிப்து, சவுதி அரேபியா, பிரேசில் அர்ஜெண்டினா உள்ளிட்ட 17 நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது….. .

Tags: brahmos missileLucknowBrahmos Aerospacepakistanrussiauttar pradeshdefence minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

Next Post

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

Related News

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் – கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ரூ.5000 கோடி மேல் ஊழல் – ராஜ்நாத்சிங்

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies