சுடச்சுட தீபாவளி பலகாரங்கள் - தயாரிக்கும் 500 பெண்கள்!
Jun 14, 2026, 07:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுடச்சுட தீபாவளி பலகாரங்கள் – தயாரிக்கும் 500 பெண்கள்!

Murugesan M by Murugesan M
Oct 19, 2025, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகையை ஒட்டிச் சேலம் அருகே 50க்கும் மேற்பட்ட வீடுகளில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் சுடச்சுட பலகாரங்களை தயார் செய்து வருகின்றனர். இந்தப் பலகாரங்களில் அப்படி என்ன தனிச்சிறப்பு…? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…

சேலம் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி, மருளபாளையம், மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இங்கே நடைபெறும் குடிசை தொழில்தான் தீபாவளி நேரத்தில் கூடுதலாகக் களைகட்டியுள்ளது. 50க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ள இந்தக் குடிசை தொழிலில்தான் விதவிதமான பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இப்படி முறுக்கு, அதிரசம், தட்டு வடை எனத் தயாராகும் பலகாரங்களுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்தப் பலகாரங்களின் தனி ருசிக்கும், மணத்திற்கும் அவற்றைத் தயாரிக்கும் பெண்களின் கைப்பக்குவமே காரணம் என உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் இந்தப் பலகாரங்களை வாங்கிச் செல்கின்றனர். பலர் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து எனப் பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கும் இந்தப் பலகாரங்களை வாங்கி அனுப்புகின்றனர். இந்தப் பலகாரங்களுக்காகப் பிரத்யேகமான, அரிசி, உளுந்து ஆகியவற்றை முதல் நாள் மதியமே தண்ணீரில் ஊற வைக்கின்றனர்.

பின்னர் அதனை அதிகாலை 3 மணிக்கு இரண்டு முறை சுத்தம் செய்கின்றனர். 4 மணிக்கு அதனைப் பக்குவமாக இரண்டு எந்திரங்களில் அரைத்து, அதில் தேவையான அளவுக் கடலை மாவு, ஓமம், எள், பொட்டுக்கடலை, மிளகாய் பொடி, பெருங்காயம் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து பிசைந்து முறுக்குகளை தங்களின் கைகளாலே பெண்கள் சுற்றுகின்றனர்.

தட்டு வடைக்கு நிலக்கடலை பருப்பை முழுமையானதாகவும், உடைத்தும் சேர்த்து அதற்கான மிஷின் மூலம் தயாரிக்கின்றனர். சிறிது நேரம் காற்றில் உலரச் செய்து, இரண்டு முறை எண்ணெய் சட்டியில் வேக வைத்த பின்னரே தட்டு வடையை விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதேபோல் அதிரசத்தின் அலாதியான ருசிக்கும் காரணம் இருக்கிறது.

உருண்டை வெள்ளத்தை பக்குவப்படுத்தி அதனுடன் புளிக்கச் செய்த அரிசி மாவை சேர்த்து மிதமான பக்குவத்தில் எண்ணெயில் வேக வைத்து அதிரசம் தயார் செய்கின்றனர். இந்த ருசிதான் பலரையும் கவர்ந்திழுக்கிறது.

தீபாவளி பண்டிகைக்காக ஆயுத பூஜை முடிந்த மறுநாள் துவங்கி தற்போது வரை இந்தப் பலகாரங்கள் படுஜோராகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. பெண்களால் இரவு பகலாகத் தயாரிக்கப்படும் இந்தப் பலகாரங்களைப் பலரும் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

Tags: 500 women preparing delicious Diwali delicaciesசுடச்சுட தீபாவளி பலகாரங்கள்
ShareTweetSendShare
Previous Post

படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம்!

Next Post

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

Related News

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies