சுடச்சுட தீபாவளி பலகாரங்கள் - தயாரிக்கும் 500 பெண்கள்!
Sep 12, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுடச்சுட தீபாவளி பலகாரங்கள் – தயாரிக்கும் 500 பெண்கள்!

Murugesan M by Murugesan M
Oct 19, 2025, 06:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீபாவளி பண்டிகையை ஒட்டிச் சேலம் அருகே 50க்கும் மேற்பட்ட வீடுகளில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் சுடச்சுட பலகாரங்களை தயார் செய்து வருகின்றனர். இந்தப் பலகாரங்களில் அப்படி என்ன தனிச்சிறப்பு…? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…

சேலம் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி, மருளபாளையம், மல்லசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இங்கே நடைபெறும் குடிசை தொழில்தான் தீபாவளி நேரத்தில் கூடுதலாகக் களைகட்டியுள்ளது. 50க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ள இந்தக் குடிசை தொழிலில்தான் விதவிதமான பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இப்படி முறுக்கு, அதிரசம், தட்டு வடை எனத் தயாராகும் பலகாரங்களுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்தப் பலகாரங்களின் தனி ருசிக்கும், மணத்திற்கும் அவற்றைத் தயாரிக்கும் பெண்களின் கைப்பக்குவமே காரணம் என உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் இந்தப் பலகாரங்களை வாங்கிச் செல்கின்றனர். பலர் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து எனப் பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கும் இந்தப் பலகாரங்களை வாங்கி அனுப்புகின்றனர். இந்தப் பலகாரங்களுக்காகப் பிரத்யேகமான, அரிசி, உளுந்து ஆகியவற்றை முதல் நாள் மதியமே தண்ணீரில் ஊற வைக்கின்றனர்.

பின்னர் அதனை அதிகாலை 3 மணிக்கு இரண்டு முறை சுத்தம் செய்கின்றனர். 4 மணிக்கு அதனைப் பக்குவமாக இரண்டு எந்திரங்களில் அரைத்து, அதில் தேவையான அளவுக் கடலை மாவு, ஓமம், எள், பொட்டுக்கடலை, மிளகாய் பொடி, பெருங்காயம் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து பிசைந்து முறுக்குகளை தங்களின் கைகளாலே பெண்கள் சுற்றுகின்றனர்.

தட்டு வடைக்கு நிலக்கடலை பருப்பை முழுமையானதாகவும், உடைத்தும் சேர்த்து அதற்கான மிஷின் மூலம் தயாரிக்கின்றனர். சிறிது நேரம் காற்றில் உலரச் செய்து, இரண்டு முறை எண்ணெய் சட்டியில் வேக வைத்த பின்னரே தட்டு வடையை விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதேபோல் அதிரசத்தின் அலாதியான ருசிக்கும் காரணம் இருக்கிறது.

உருண்டை வெள்ளத்தை பக்குவப்படுத்தி அதனுடன் புளிக்கச் செய்த அரிசி மாவை சேர்த்து மிதமான பக்குவத்தில் எண்ணெயில் வேக வைத்து அதிரசம் தயார் செய்கின்றனர். இந்த ருசிதான் பலரையும் கவர்ந்திழுக்கிறது.

தீபாவளி பண்டிகைக்காக ஆயுத பூஜை முடிந்த மறுநாள் துவங்கி தற்போது வரை இந்தப் பலகாரங்கள் படுஜோராகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. பெண்களால் இரவு பகலாகத் தயாரிக்கப்படும் இந்தப் பலகாரங்களைப் பலரும் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

Tags: 500 women preparing delicious Diwali delicaciesசுடச்சுட தீபாவளி பலகாரங்கள்
Share
Tweet
SendShare
Previous Post

படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம்!

Next Post

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

Related News

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies