நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!
Oct 11, 2025, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

Web Desk by Web Desk
Oct 11, 2025, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைதிக்கான நோபல் பரிசு தேர்வில் அரசியல் விளையாடி இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. அமைதிக்காக அறிவிப்பக்கப்பட்ட நோபல் பரிசு தற்போது மோதலைக் கிளப்பி இருக்கிறது. விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

2025-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்படவில்லை என்பது அமெரிக்க அதிபர் ட்ரம்பை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை நேரடியாக விமர்சித்துப் புகைச்சலை வெளிப்படுத்தி இருக்கிறது ட்ரம்பு தரப்பு.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் செங், அமைதிக்கான நோபல் பரிசு தேர்வில் அரசியல் விளையாடி இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, சண்டைக்கு முடிவுக் கட்டி, மக்களைப் பாதுகாத்த ஒப்பற்ற மனிதரையா புறக்கணிக்கிறீர்கள் என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். மலையையே அசைத்துப் பார்க்கும் குணம் கொண்டவராகவும், மனிதநேய பண்பாளராக இருக்கும் அதிபர் ட்ரம்புக்கு நிகர் எவரும் இல்லை என்றும் மரியா கொரினா மச்சாடோவை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

ஆனால் நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோவை பொறுத்த வரையில், அதிபர் ட்ரம்ப் மீது மிகுந்த மரியாதை கொண்டவராக இருக்கிறார். வெனிசுலாவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த அதிபர் ட்ரம்ப் துணை நிற்கிறார் என ஒருமுறை, இருமுறையல்ல… பலமுறை பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

நடப்பாண்டில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூட, வெனிசுலாவுக்கு ஆதரவளிக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி எனத் தெரிவித்தார். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் துணை நிற்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு காலமுழுக்க நன்றி கடன் பட்டிருப்பதாகவும் கூறினார்.

இதுமட்டுமல்ல, டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்வானபோது கூட, மச்சாடோ மனமார்ந்த வாழ்த்து தெரிவித்தார். இப்படி ட்ரம்ப் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமெரிக்க அரசு நிர்வாகத்தினர் கூறும் கருத்துகள் காயம் ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

இத்தனை ஆண்டுகள் காயத்திற்கு மருந்திட்டு வந்தவர்கள், ஒரு பரிசுக்காக இப்படி வசைபாடு தொடங்கிவிட்டார்களே என கவலை தெரிவிக்கின்றனர் மச்சாடோ ஆதரவாளர்கள்.

Tags: usaDonald TrumpNobel Peace PrizePolitics in Nobel Prize announcement?: US President Trump in a tizzyamerica
ShareTweetSendShare
Previous Post

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

Next Post

மதுரை : குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகார் – திமுக அரசு மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் குற்றச்சாட்டு!

Related News

ஆஸ்திரேலியா : ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்கள் எடுத்து கின்னஸ் உலக சாதனையை படைத்த பெண் காவலர்!

190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல் உயிரினம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!

ராஜினாமா செய்த 4 நாட்களில் மீண்டும் பிரதமரான லெகோர்னு!

கனமழை மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வியட்நாம்!

ஆப்பிரிக்காவில் இளைய தலைமுறைக்கு பண்டைய மொழியை கற்றுக் கொடுக்கும் மூதாட்டி!

மரியாவிடம் நோபல் பரிசை வழங்கும்படி நான் கேட்கவில்லை – அதிபர் டிரம்ப்

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தூத்துக்குடி : காட்டுப் பன்றி தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்ற தொழிலாளி காயம்!

காசா போர் நிறுத்தம் குறித்து பேசும் முதல்வர் ஸ்டாலின் – சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? : ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

டெல்லியில் பிரதமர் மோடி – பினராயி விஜயன் சந்திப்பு!

ஆர்.எஸ்.எஸ் தடைகளை கடந்து செயல்படும் – சுனில் அம்பேகர்

ஏற்காடு சுற்றுலா தலத்தில் டன் கணக்கில் தேங்கிய குப்பைகள்!

தீபாவளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் : இந்து மக்கள் கட்சியினர் மனு!

தூத்துக்குடி : காவல் நிலையம் முன் பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிப்பு!

கொடைக்கானல் : இரவு நேரத்தில் உலா வரும் யானைகள் – வாகன ஓட்டிகள் அச்சம்!

உத்தரப்பிரதேசம் : காதலியுடன் சாலையில் சுற்றித் திரிந்த கணவன் – காதலியை தாக்கிய மனைவி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies