144 தடை உத்தரவு : இணையசேவை முடக்கம் - தெஹ்ரீக்-இ-லபாய்க் போராட்டத்தால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்!
Jan 14, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

144 தடை உத்தரவு : இணையசேவை முடக்கம் – தெஹ்ரீக்-இ-லபாய்க் போராட்டத்தால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. போராட்டத்திற்கான காரணம், குறித்து தற்போது பார்க்கலாம்.

பாகிஸ்தானில் தற்போது நிலவும் கூடுதல் பதற்றத்திற்கு தெஹ்ரீக்-இ-லபாய்க் நடத்திய பேரணிதான் காரணம். பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராகப் பேரணியாக செல்ல முயன்றனர்.

தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கிப் பேரணியாகச் சென்ற அவர்களை பாதுகாப்புப் படை தடுத்து நிறுத்தியது. இதனால் தெஹ்ரிக்-இ-லபாய்க் அமைப்பினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த பயங்கர மோதல், திடீரென வன்முறை கொப்பளிக்கும் போர்க்களமாக மாறியது.

கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் காவல்துறையினரை இஸ்ரேலிய குண்டர்கள் என்று அழைத்த தெஹ்ரீக்-இ-லபாய்க் அமைப்பினர், போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

தெஹ்ரீக் அமைப்பின் தலைவர் சாத் ரிஸ்வி தலைமையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட சென்றவர்களை தடுக்க, போலீசார், தடுப்புகள் அமைத்தும், அகழிகள் தோண்டியும், கப்பல் கொள்கலன்களையும் அடுக்கி வைத்திருந்தனர்.

கைது ஒரு பிரச்சனையல்ல, தோட்டாக்கள் ஒரு பிரச்சனையல்ல, குண்டுகள் ஒரு பிரச்சனையல்ல – தியாகம்தான் எங்கள் விதி எனத் தெஹ்ரரீக் தலைவர் சாத் ரிஸ்வி தெரிவித்தார். போராட்டங்களும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையும் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் இரண்டாவது நாளாக வாழ்க்கையை முடக்கியது, இரண்டு நகரங்களும் ஒரு கோட்டையாகப் போன்று மாறியது, முக்கிய சாலைகள் சீல் வைக்கப்பட்டன, வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன, இணைய சேவைகள் முடக்கப்பட்டன.

பாலஸ்தீன ஆதரவு போராட்டம் அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படுவதாகப் பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில் எந்தவொரு குழுவும் வன்முறையைப் பயன்படுத்தவோ அல்லது அரசை அச்சுறுத்தவோ அரசு அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.

Tags: pakistan144 baninternet shutdown: Pakistan brought to a standstill by Tehreek-e-Labaik protests144 தடை உத்தரவு இணையசேவை முடக்கம்பாகிஸ்தானில் இணையசேவை முடக்கம்
ShareTweetSendShare
Previous Post

நம்பிக்கையுடன் காத்திருக்கும் நேபாள குடும்பம் : ஹமாஸிடம் சிக்கியுள்ள இந்து மாணவர் விடுவிக்கப்படுவாரா?

Next Post

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies