ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? - சிறப்பு தொகுப்பு!
Oct 12, 2025, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Oct 12, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை வியாசர்பாடி கணேசாபுரம் மேம்பால பணிகள் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகியும் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதால் அப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்லவே சிரமப்படும் நிலையில், பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பருவ மழையின் போது சென்னை மாநகரில் மழை நீரால் தத்தளிக்கும் பகுதிகளில் மிக முக்கியமான பகுதி தான் வட சென்னை. வடசென்னையின் கணேசபுரம் சுரங்கப்பாதை மழை நீரால் மூழ்குவதையும் அப்பகுதி மக்கள் படும் துயரத்தினையும் ஆண்டுதோறும் பார்க்க முடிகிறது.

வியாசர்பாடி, கொளத்தூர், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், மூலக்கடை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையை கடந்து செல்ல வேண்டும் என்ற சூழலால் போக்குவரத்து நெரிசலும் அதிகளவு ஏற்படுகிறது.

பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் 226 கோடி ரூபாய் செலவில் 600 மீட்டர் தூரத்திற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 50 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், மீதமிருக்கும் பணிகள் எப்போது முடியும் என அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

கணேசபுரம் மேம்பால திட்டம் தொடங்கிய நாட்களில் மகிழ்ச்சியாக இருந்த பகுதி மக்கள், ஆமை வேகத்தில் நடந்து வரும் பணிகளை கண்டு மிகுந்த அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மீண்டும் மழையால் தத்தளிக்கும் அவல நிலையை நினைத்து அவர்கள் வேதனையடைந்துள்ளனர். வருடக்கணக்கில் நடைபெறும் பணிகளால் அப்பகுதிகளில் கடை வைத்துள்ள வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் தொடங்கி, மருத்துவமனைக்கு கூட பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளை விரைவுபடுத்தி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags: VyasarpadiVyasarpadi Ganeshapuram flyoverGaneshapuram tunnelKannadasan NagarChennaikolathurMadhavaramKodungaiyur
ShareTweetSendShare
Previous Post

கோவையில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

Next Post

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

Related News

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

உச்சரிக்கவே 20 நிமிடம் – 6 பக்க பெயர் கொண்ட மாமனிதர் : சிறப்பு தொகுப்பு!

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

கோவையில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

மகா கந்த சஷ்டி விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற வேல் வழங்கும் நிகழ்வு!

சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையில் உயிரிழந்த தாதா நாகேந்திரனின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்!

உர தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு குறட்டை விட்டு உறங்கி கொண்டிருக்கிறது – அன்புமணி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – 8-வது நாளாக எஸ்ஐடி விசாரணை!

ஈரோடு அருகே 19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்!

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies