ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 12, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை வியாசர்பாடி கணேசாபுரம் மேம்பால பணிகள் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகியும் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதால் அப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்லவே சிரமப்படும் நிலையில், பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பருவ மழையின் போது சென்னை மாநகரில் மழை நீரால் தத்தளிக்கும் பகுதிகளில் மிக முக்கியமான பகுதி தான் வட சென்னை. வடசென்னையின் கணேசபுரம் சுரங்கப்பாதை மழை நீரால் மூழ்குவதையும் அப்பகுதி மக்கள் படும் துயரத்தினையும் ஆண்டுதோறும் பார்க்க முடிகிறது.

வியாசர்பாடி, கொளத்தூர், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், மூலக்கடை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையை கடந்து செல்ல வேண்டும் என்ற சூழலால் போக்குவரத்து நெரிசலும் அதிகளவு ஏற்படுகிறது.

பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் 226 கோடி ரூபாய் செலவில் 600 மீட்டர் தூரத்திற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 50 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், மீதமிருக்கும் பணிகள் எப்போது முடியும் என அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

கணேசபுரம் மேம்பால திட்டம் தொடங்கிய நாட்களில் மகிழ்ச்சியாக இருந்த பகுதி மக்கள், ஆமை வேகத்தில் நடந்து வரும் பணிகளை கண்டு மிகுந்த அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மீண்டும் மழையால் தத்தளிக்கும் அவல நிலையை நினைத்து அவர்கள் வேதனையடைந்துள்ளனர். வருடக்கணக்கில் நடைபெறும் பணிகளால் அப்பகுதிகளில் கடை வைத்துள்ள வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் தொடங்கி, மருத்துவமனைக்கு கூட பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளை விரைவுபடுத்தி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags: VyasarpadiVyasarpadi Ganeshapuram flyoverGaneshapuram tunnelKannadasan NagarChennaikolathurMadhavaramKodungaiyur
Share
Tweet
SendShare
Previous Post

கோவையில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

Next Post

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies