மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!
Oct 13, 2025, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

Web Desk by Web Desk
Oct 13, 2025, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்க மாநிலம், துர்காபூரில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…

ஒடிசா மாநிலம், ஜலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த 23 வயது மாணவி, மேற்கு வங்கத்தின் துர்காபூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

கடந்த 10-ம் தேதி இரவு மாணவி, தனது ஆண் நண்பருடன் உணவருந்த வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர், ஆண் நண்பரை சரமாரியாக தாக்கித் துரத்தியுள்ளனர்.

தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு, வலுக்கட்டாயமாக மாணவியை தூக்கிச் சென்றவர்கள் அவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த மாணவி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி மருத்துவ மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

அதனடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார் வழக்கில் தொடர்புடைய அப்பு பௌரி, ஃபிர்தோஸ் ஷேக் மற்றும் ஷேக் ரெயாஜுதீன் ஆகிய 3 பேரை கைது செய்ததுடன் மாணவியின் ஆண் நண்பரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இது ஒருபுறமிருக்க நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கல்லூரி நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இரவு நேரத்தில் மாணவியை கல்லூரி நிர்வாகம் வெளியே அனுப்ப சம்மதித்தது தவறு எனக் குற்றம் சாட்டியுள்ள அவர், கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மட்டுமே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடந்த அசம்பாவிதத்தால் மிகுந்த வேதனையில் உள்ள தங்கள் மகளின் உயிருக்கு மேற்கு வங்கத்தில் ஆபத்து இருப்பதாகவும், அவரை ஒடிசாவிற்கு திரும்பி அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் மாணவியின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் மகளை ஒடிசாவிற்கு அழைத்துச் வர உதவுவதாக ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (BREATH) ஏற்கனவே கடந்த ஆண்டு மேற்கு வங்கத்திலுள்ள மற்றொரு தனியார் மருத்துவ கல்லூரியில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அந்தச் சம்பவத்தின் தாக்கம் மனதைவிட்டு மறைவதற்குள், மற்றொரு மருத்துவ மாணவியும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

Tags: Sexual violence continues in West Bengal: Women's safety in questionகேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு
ShareTweetSendShare
Previous Post

பெங்களூரு : மாட்டு வண்டியில் சென்று சொகுசு காரை வாங்கிய விவசாயி!

Next Post

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

Related News

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

லக்னோவில் இனிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது ஓடிய எலி!

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஒன்றும் செய்யாத தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல்துறையினர் தடியடி நடத்தினர் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

பெங்களூரு : மாட்டு வண்டியில் சென்று சொகுசு காரை வாங்கிய விவசாயி!

விருதுநகர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் குவியும் மக்கள்!

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல் – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தகவல்!

அமெரிக்கா சீனாவிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை – டிரம்ப்

மடகாஸ்கர் : போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய சில ராணுவ வீரர்கள்!

காபூல் – டெல்லி இடையே விமான சேவைகளை அதிகரிக்க உள்ளோம் : வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies