GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் - கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!
Mar 15, 2026, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏ.ஐ. தொழில்நுட்பம் சர்வதேச அளவில் லட்சக்கணக்கானோரின் வேலையை பறித்துவிடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறது கூகுள். ஏ.ஐ.தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை உருவாக்குமே தவிர, பணியாளர்களுக்கு மாற்றாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. என்ன காரணம் தற்போது பார்க்கலாம்.

சர்வதேச அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் ஏ.ஐ.தொழில்நுட்பம் Tech துறையில் புதிய பாய்ச்சலுடன் வளர்ந்து வருகிறது… மனித ஆற்றலுடன் ஒப்பிடும்போது, மிக எளிதாக ஒரு பணியை செய்து முடிக்கக்கூடிய திறனால், பல டெக் நிறுவனங்கள், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பின.

பல்வேறு துறைகளில் ஏ.ஐ. ஆதிக்கம் செலுத்தி வருவதன் எதிரொலியாக, குறிப்பாக ஐ.டி.துறையில் நாளுக்கு நாள் ஊழியர்களின் பணிநீக்கம் பற்றிய அறிவிப்புகள் கிலியை ஏற்படுத்தி வந்தன. ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மின்னல் வேக வளர்ச்சியால், எதிர்காலத்தில் 70 சதவிகிதம் வேலைவாய்ப்பு பறிபோகும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என்று கூறியுள்ள கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், செயற்கை நுண்ணறிவு, பணியாளர்களின் திறனை மேம்படுத்த உதவுமே தவிர, பணியாளர்களுக்கான மாற்று அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வேலைக்கு பதிலாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை விடுத்து, அது மனிதர்களின் திறனை பெருக்கும் கருவியாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பம் சேவை துறையில் வேலைகளை பறித்துவிடும் என்ற கவலை இருந்தபோதும், கூகுளின் வாடிக்கையாளர் ஈடுபாட்டுத் தொகுப்பைப் பயன்படுத்திய பின்னர், தங்கள் வாடிக்கையாளர் யாரையும் வேலையை விட்டு அனுப்பவில்லை என்று தாமஸ் குரியன் விளக்கம் அளித்துள்ளார்.

இதே போன்று அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஏ.ஐ. டூல்ஸ் மூலம் தங்களது பொறியாளர்களிடையே 100 சதவிகித உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அதன் வெளிப்பாடாக ஊழியர்களை குறைப்பதற்கு பதிலாக, அடுத்த ஆண்டில் அதிக பொறியாளர்களை நியமிக்கக் கூகுள் திட்டமிட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் சுந்தர் பிச்சை.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்கள் திரும்பத் திரும்ப செய்யும் பணிகளை நீக்குவதோடு, பொறியாளர்களுக்கு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யத் தூண்டுவதாகவும் சுந்தர் பிச்சை கூறியிருந்தார். ஏ.ஐ. தொழில்நுட்பம் மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளை நீக்கி, பொறியாளர்களுக்கு அதிக ஆக்கபூர்வமான பணிகளைச் செய்வதற்கான சுதந்திரத்தை அளிப்பதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார். இது போன்ற நம்பகமான கருத்துகள், வேலை பறிபோகுமோ என்ற ஏக்கத்தில் இருந்து ஊழியர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது என்றே கூறலாம்.

Tags: கூகுள் திட்டம்googleAI technologyGOOD NEWS people: A.I. Technology will not take away jobs - Google plans to hire additional employeesGOOD NEWS
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

Next Post

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies