GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் - கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!
Jul 23, 2026, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏ.ஐ. தொழில்நுட்பம் சர்வதேச அளவில் லட்சக்கணக்கானோரின் வேலையை பறித்துவிடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறது கூகுள். ஏ.ஐ.தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை உருவாக்குமே தவிர, பணியாளர்களுக்கு மாற்றாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. என்ன காரணம் தற்போது பார்க்கலாம்.

சர்வதேச அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் ஏ.ஐ.தொழில்நுட்பம் Tech துறையில் புதிய பாய்ச்சலுடன் வளர்ந்து வருகிறது… மனித ஆற்றலுடன் ஒப்பிடும்போது, மிக எளிதாக ஒரு பணியை செய்து முடிக்கக்கூடிய திறனால், பல டெக் நிறுவனங்கள், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பின.

பல்வேறு துறைகளில் ஏ.ஐ. ஆதிக்கம் செலுத்தி வருவதன் எதிரொலியாக, குறிப்பாக ஐ.டி.துறையில் நாளுக்கு நாள் ஊழியர்களின் பணிநீக்கம் பற்றிய அறிவிப்புகள் கிலியை ஏற்படுத்தி வந்தன. ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மின்னல் வேக வளர்ச்சியால், எதிர்காலத்தில் 70 சதவிகிதம் வேலைவாய்ப்பு பறிபோகும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என்று கூறியுள்ள கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், செயற்கை நுண்ணறிவு, பணியாளர்களின் திறனை மேம்படுத்த உதவுமே தவிர, பணியாளர்களுக்கான மாற்று அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வேலைக்கு பதிலாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை விடுத்து, அது மனிதர்களின் திறனை பெருக்கும் கருவியாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பம் சேவை துறையில் வேலைகளை பறித்துவிடும் என்ற கவலை இருந்தபோதும், கூகுளின் வாடிக்கையாளர் ஈடுபாட்டுத் தொகுப்பைப் பயன்படுத்திய பின்னர், தங்கள் வாடிக்கையாளர் யாரையும் வேலையை விட்டு அனுப்பவில்லை என்று தாமஸ் குரியன் விளக்கம் அளித்துள்ளார்.

இதே போன்று அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஏ.ஐ. டூல்ஸ் மூலம் தங்களது பொறியாளர்களிடையே 100 சதவிகித உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அதன் வெளிப்பாடாக ஊழியர்களை குறைப்பதற்கு பதிலாக, அடுத்த ஆண்டில் அதிக பொறியாளர்களை நியமிக்கக் கூகுள் திட்டமிட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் சுந்தர் பிச்சை.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்கள் திரும்பத் திரும்ப செய்யும் பணிகளை நீக்குவதோடு, பொறியாளர்களுக்கு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யத் தூண்டுவதாகவும் சுந்தர் பிச்சை கூறியிருந்தார். ஏ.ஐ. தொழில்நுட்பம் மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளை நீக்கி, பொறியாளர்களுக்கு அதிக ஆக்கபூர்வமான பணிகளைச் செய்வதற்கான சுதந்திரத்தை அளிப்பதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார். இது போன்ற நம்பகமான கருத்துகள், வேலை பறிபோகுமோ என்ற ஏக்கத்தில் இருந்து ஊழியர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது என்றே கூறலாம்.

Tags: கூகுள் திட்டம்googleAI technologyGOOD NEWS people: A.I. Technology will not take away jobs - Google plans to hire additional employeesGOOD NEWS
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

Next Post

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

Related News

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies