GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் - கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!
Sep 12, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 06:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏ.ஐ. தொழில்நுட்பம் சர்வதேச அளவில் லட்சக்கணக்கானோரின் வேலையை பறித்துவிடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறது கூகுள். ஏ.ஐ.தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை உருவாக்குமே தவிர, பணியாளர்களுக்கு மாற்றாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. என்ன காரணம் தற்போது பார்க்கலாம்.

சர்வதேச அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் ஏ.ஐ.தொழில்நுட்பம் Tech துறையில் புதிய பாய்ச்சலுடன் வளர்ந்து வருகிறது… மனித ஆற்றலுடன் ஒப்பிடும்போது, மிக எளிதாக ஒரு பணியை செய்து முடிக்கக்கூடிய திறனால், பல டெக் நிறுவனங்கள், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பின.

பல்வேறு துறைகளில் ஏ.ஐ. ஆதிக்கம் செலுத்தி வருவதன் எதிரொலியாக, குறிப்பாக ஐ.டி.துறையில் நாளுக்கு நாள் ஊழியர்களின் பணிநீக்கம் பற்றிய அறிவிப்புகள் கிலியை ஏற்படுத்தி வந்தன. ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மின்னல் வேக வளர்ச்சியால், எதிர்காலத்தில் 70 சதவிகிதம் வேலைவாய்ப்பு பறிபோகும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என்று கூறியுள்ள கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், செயற்கை நுண்ணறிவு, பணியாளர்களின் திறனை மேம்படுத்த உதவுமே தவிர, பணியாளர்களுக்கான மாற்று அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வேலைக்கு பதிலாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை விடுத்து, அது மனிதர்களின் திறனை பெருக்கும் கருவியாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பம் சேவை துறையில் வேலைகளை பறித்துவிடும் என்ற கவலை இருந்தபோதும், கூகுளின் வாடிக்கையாளர் ஈடுபாட்டுத் தொகுப்பைப் பயன்படுத்திய பின்னர், தங்கள் வாடிக்கையாளர் யாரையும் வேலையை விட்டு அனுப்பவில்லை என்று தாமஸ் குரியன் விளக்கம் அளித்துள்ளார்.

இதே போன்று அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஏ.ஐ. டூல்ஸ் மூலம் தங்களது பொறியாளர்களிடையே 100 சதவிகித உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அதன் வெளிப்பாடாக ஊழியர்களை குறைப்பதற்கு பதிலாக, அடுத்த ஆண்டில் அதிக பொறியாளர்களை நியமிக்கக் கூகுள் திட்டமிட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் சுந்தர் பிச்சை.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்கள் திரும்பத் திரும்ப செய்யும் பணிகளை நீக்குவதோடு, பொறியாளர்களுக்கு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யத் தூண்டுவதாகவும் சுந்தர் பிச்சை கூறியிருந்தார். ஏ.ஐ. தொழில்நுட்பம் மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளை நீக்கி, பொறியாளர்களுக்கு அதிக ஆக்கபூர்வமான பணிகளைச் செய்வதற்கான சுதந்திரத்தை அளிப்பதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார். இது போன்ற நம்பகமான கருத்துகள், வேலை பறிபோகுமோ என்ற ஏக்கத்தில் இருந்து ஊழியர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது என்றே கூறலாம்.

Tags: கூகுள் திட்டம்googleAI technologyGOOD NEWS people: A.I. Technology will not take away jobs - Google plans to hire additional employeesGOOD NEWS
Share
Tweet
SendShare
Previous Post

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

Next Post

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies