வங்கதேசம், நேபாளத்தைத் தொடர்ந்து மடகாஸ்கரில் அரசுக்கு எதிரான ஜென் ஸி போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அந்நாட்டு அதிபர் நாட்டை விட்டு தப்பியோடியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஊழல், வறுமை, மின்தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி அரசுக்கு எதிராக ஜென்ஸி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25ம் தேதி தொடங்கிய போராட்டம் அதிபர் ரஜோலினாவுக்கு எதிராகவும், அவரது அரசுக்கு எதிராகவும் திரும்பியது.
மேலும், அந்நாட்டு ராணுவத்தின் கெப்செட் எனப்படும் முக்கிய படைப்பிரிவு அதிபரின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிராகத் திரும்பியது.
இதையடுத்து அதிபர் ரஜோலினா, பிரான்ஸ் ராணுவ விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச்சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் தப்பியோடியதை அடுத்து ராணுவத்தின் கெப்செட் படைப்பிரிவு நாட்டின் பல்வேறு பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.