கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாதிகளால் பணயக்கைதியாகப் பிடித்து செல்லப்பட்ட ஒரே இந்துவான நேபாள மாணவர்  சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது அவரது குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

“இறந்துவிட்டார்”, இந்த ஒற்றை வார்த்தை, இதயத்தை உறைய வைக்கிறது. பெயர், முகம், நம்பிக்கை எல்லாமே ஒரு கணம் மறத்து விடுகிறது. இனம் புரியாமல் உடல் நடுங்குகிறது. அப்படி ஒரு செய்தி, கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி வந்தது.

ஹமாஸ் பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஒரே நேபாளரான பிபின் ஜோஷி உயிருடன் இல்லை என்பதே அந்தச் செய்தி. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த காசா அமைதி திட்டத்தின் முதல் கட்டமாக, ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்த 20 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியைத் தொடர்ந்து, சில நிமிடங்களிலே துக்கமும் வேதனையும் வந்தது.

நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இறந்தவர்களில் பணயக் கைதியாகச் சிறைப் பிடிக்கப் பட்ட ஒரே இந்துவான நேபாளத்தைச் சேர்ந்த பிபின் ஜோஷியும் ஒருவர். இத்தகவலை இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் எஃபி டெஃப்ரின் உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேல் அதிகாரிகளிடம் ஒப்படைத்த பணயக் கைதிகளின் உடல்கள் டிஎன்ஏ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, யாருடைய உடல் என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் கொடுக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான நேபாளத் தூதர் தனப் பிரசாத் பண்டிட் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேலுக்கான நேபாளத் தூதர், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், பிபின் ஜோஷியின் மூத்த சகோதரர்க் கிஷோர் ஜோஷி, தாய் பத்மா, மற்றும் தங்கைப் புஷ்பா ஆகியோருடன் காணொளி சந்திப்பை இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் நடத்தினர். அதில்,
உயிருடன் இருக்கும் உறுதிசெய்யப்பட்ட பணயக் கைதிகளின் பட்டியலில் பிபின் ஜோஷியின் பெயர் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டது.

முன்னதாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, இஸ்ரேலுக்கும் நேபாளத்துக்கும் அலைந்த பிபினின் தாயும் தங்கையும் அந்நாட்டின் அதிபர், பிரதமர், மற்றும் நாடாளுமன்ற சபாநாயகரையும் சந்தித்துப் பிபின் ஜோஷியின் விடுதலைக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

அதே ஆண்டு, செப்டம்பரில், இஸ்ரேலின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்ற பிபின் குடும்பத்தினர் ஐநா பொதுச் சபையிலும் முறையிட்டனர். 2023ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஏவுகணைத் தாக்குதல் மட்டுமின்றி, இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 நேபாள மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயமடைந்தனர், ஒருவர் காயமின்றி தப்பினார். ஜோஷியையும் தாய்லாந்து மாணவர் ஒருவரையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் சிறைப் பிடித்துச் சென்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், இஸ்ரேல் இராணுவத்தால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகளில் ஜோஷி, காசாவின் ஷிஃபா மருத்துவமனைக்கு இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டியது, அவர் உயிருடன் இருப்பதாக அறியப்பட்ட கடைசி காட்சி அது தான்.

33 வினாடிகள் நீளமுள்ள அந்த வீடியோவில், பிபின் ஜோஷி, 23 வயதான தாம் நேபாளத்தைச் சேர்ந்த மாணவன் என்றும், வேலையுடன் கூடிய படிப்பு என்ற திட்டத்தின் கீழ் 25 நாட்களுக்கு முன்பு இஸ்ரேலுக்கு வந்ததாகவும், எலுமிச்சைப் பண்ணையில் வேலைச் செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

நம்பிக்கையின் ஒளியாகத் தோன்றிய அந்த வீடியோ, பிபின் ஜோஷியின் உயிருக்கு உறுதியான சான்றாக மாறவில்லை. ஆனாலும் அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் அவர்  பாதுகாப்பாக வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

உயிர்  பிழைத்த பணயக்கைதிகளின் பட்டியலில் பிபின் பெயர் இல்லை என்று இஸ்ரேலுக்கான நேபாளத் தூதர் கூறிய போது, கசப்பான உண்மை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.

உயிரோடு திரும்பி இருந்தால், வரும் அக்டோபர் 26ம் தேதி தனது 25 பிறந்த நாளை  குடும்பத்தினருடன் கொண்டாடி இருப்பார்  பிபின். 738 நாட்களாக ஒவ்வொரு இரவும் பிபினின் தாயார்  செய்த பிரார்த்தனை  பதிலளிக்கப்படாத பிரார்த்தனையாக முடித்துள்ளது.

இது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல. இது ஒரு தேசிய துக்கம். ஒரு இளம், திறமையான வாழ்க்கையின் முடிவு. பிபின் ஜோஷியின் வாழ்க்கை நம்பிக்கையின் மீது அமைக்கப்பட்டிருந்தது. அவரது மரணம் அந்த நம்பிக்கையை மனவேதனையாக மாற்றியுள்ளது.

Tags: Hamasஇஸ்ரேல்இந்துHope turned into a dream: Hamas hands over Nepali Hindu student as a corpseகனவாகி போன நம்பிக்கைஹமாஸ் தீவிரவாதி
ShareTweetSendShare
Previous Post

இந்திய அரசின் மின்னஞ்சல் சேவைகள் ZOHO-விற்கு மாற்றம் : நாட்டின் சுயநிறைவு பார்வைக்கான வலிமையான அடித்தளம்…!

Next Post

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies