கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!
Sep 12, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 08:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாதிகளால் பணயக்கைதியாகப் பிடித்து செல்லப்பட்ட ஒரே இந்துவான நேபாள மாணவர்  சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது அவரது குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

“இறந்துவிட்டார்”, இந்த ஒற்றை வார்த்தை, இதயத்தை உறைய வைக்கிறது. பெயர், முகம், நம்பிக்கை எல்லாமே ஒரு கணம் மறத்து விடுகிறது. இனம் புரியாமல் உடல் நடுங்குகிறது. அப்படி ஒரு செய்தி, கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி வந்தது.

ஹமாஸ் பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஒரே நேபாளரான பிபின் ஜோஷி உயிருடன் இல்லை என்பதே அந்தச் செய்தி. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த காசா அமைதி திட்டத்தின் முதல் கட்டமாக, ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்த 20 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியைத் தொடர்ந்து, சில நிமிடங்களிலே துக்கமும் வேதனையும் வந்தது.

நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இறந்தவர்களில் பணயக் கைதியாகச் சிறைப் பிடிக்கப் பட்ட ஒரே இந்துவான நேபாளத்தைச் சேர்ந்த பிபின் ஜோஷியும் ஒருவர். இத்தகவலை இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் எஃபி டெஃப்ரின் உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேல் அதிகாரிகளிடம் ஒப்படைத்த பணயக் கைதிகளின் உடல்கள் டிஎன்ஏ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, யாருடைய உடல் என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் கொடுக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான நேபாளத் தூதர் தனப் பிரசாத் பண்டிட் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேலுக்கான நேபாளத் தூதர், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், பிபின் ஜோஷியின் மூத்த சகோதரர்க் கிஷோர் ஜோஷி, தாய் பத்மா, மற்றும் தங்கைப் புஷ்பா ஆகியோருடன் காணொளி சந்திப்பை இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் நடத்தினர். அதில்,
உயிருடன் இருக்கும் உறுதிசெய்யப்பட்ட பணயக் கைதிகளின் பட்டியலில் பிபின் ஜோஷியின் பெயர் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டது.

முன்னதாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, இஸ்ரேலுக்கும் நேபாளத்துக்கும் அலைந்த பிபினின் தாயும் தங்கையும் அந்நாட்டின் அதிபர், பிரதமர், மற்றும் நாடாளுமன்ற சபாநாயகரையும் சந்தித்துப் பிபின் ஜோஷியின் விடுதலைக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

அதே ஆண்டு, செப்டம்பரில், இஸ்ரேலின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்ற பிபின் குடும்பத்தினர் ஐநா பொதுச் சபையிலும் முறையிட்டனர். 2023ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஏவுகணைத் தாக்குதல் மட்டுமின்றி, இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 நேபாள மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயமடைந்தனர், ஒருவர் காயமின்றி தப்பினார். ஜோஷியையும் தாய்லாந்து மாணவர் ஒருவரையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் சிறைப் பிடித்துச் சென்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், இஸ்ரேல் இராணுவத்தால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகளில் ஜோஷி, காசாவின் ஷிஃபா மருத்துவமனைக்கு இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டியது, அவர் உயிருடன் இருப்பதாக அறியப்பட்ட கடைசி காட்சி அது தான்.

33 வினாடிகள் நீளமுள்ள அந்த வீடியோவில், பிபின் ஜோஷி, 23 வயதான தாம் நேபாளத்தைச் சேர்ந்த மாணவன் என்றும், வேலையுடன் கூடிய படிப்பு என்ற திட்டத்தின் கீழ் 25 நாட்களுக்கு முன்பு இஸ்ரேலுக்கு வந்ததாகவும், எலுமிச்சைப் பண்ணையில் வேலைச் செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

நம்பிக்கையின் ஒளியாகத் தோன்றிய அந்த வீடியோ, பிபின் ஜோஷியின் உயிருக்கு உறுதியான சான்றாக மாறவில்லை. ஆனாலும் அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் அவர்  பாதுகாப்பாக வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

உயிர்  பிழைத்த பணயக்கைதிகளின் பட்டியலில் பிபின் பெயர் இல்லை என்று இஸ்ரேலுக்கான நேபாளத் தூதர் கூறிய போது, கசப்பான உண்மை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.

உயிரோடு திரும்பி இருந்தால், வரும் அக்டோபர் 26ம் தேதி தனது 25 பிறந்த நாளை  குடும்பத்தினருடன் கொண்டாடி இருப்பார்  பிபின். 738 நாட்களாக ஒவ்வொரு இரவும் பிபினின் தாயார்  செய்த பிரார்த்தனை  பதிலளிக்கப்படாத பிரார்த்தனையாக முடித்துள்ளது.

இது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல. இது ஒரு தேசிய துக்கம். ஒரு இளம், திறமையான வாழ்க்கையின் முடிவு. பிபின் ஜோஷியின் வாழ்க்கை நம்பிக்கையின் மீது அமைக்கப்பட்டிருந்தது. அவரது மரணம் அந்த நம்பிக்கையை மனவேதனையாக மாற்றியுள்ளது.

Tags: ஹமாஸ் தீவிரவாதிHamasஇஸ்ரேல்இந்துHope turned into a dream: Hamas hands over Nepali Hindu student as a corpseகனவாகி போன நம்பிக்கை
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய அரசின் மின்னஞ்சல் சேவைகள் ZOHO-விற்கு மாற்றம் : நாட்டின் சுயநிறைவு பார்வைக்கான வலிமையான அடித்தளம்…!

Next Post

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies