இந்திய அரசின் மின்னஞ்சல் சேவைகள் ZOHO-விற்கு மாற்றம் : நாட்டின் சுயநிறைவு பார்வைக்கான வலிமையான அடித்தளம்...!
Oct 14, 2025, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய அரசின் மின்னஞ்சல் சேவைகள் ZOHO-விற்கு மாற்றம் : நாட்டின் சுயநிறைவு பார்வைக்கான வலிமையான அடித்தளம்…!

Web Desk by Web Desk
Oct 14, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் டிஜிட்டல் சுயநிலையை முன்னேற்றும் விதமாக மத்திய அரசின் அனைத்து மின்னஞ்சல் சேவைகளும் ZOHO-விற்கு மாற்றப்பட்டுள்ளன. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.

ZOHO நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், தலைமை விஞ்ஞானியாகவும் பொறுப்பு வகிக்கும் ஸ்ரீதர் வேம்பு, கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக உள்ளார். அதனடிப்படையில் தேசிய பாதுகாப்பு சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளையும் தனது நிறுவனத்தின் மூலம் அவர் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாகத் தற்போது இந்திய அரசு தனது அதிகாரபூர்வ மின்னஞ்சல் சேவைகள் அனைத்தையும், தனது சொந்த நாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ZOHO-விற்கு மாற்றியுள்ளது.

இதன் மூலம் பிரதமர் அலுவலகம் உட்பட சுமார் 12 லட்சம் அரசு பணியாளர்களின் மின்னஞ்சல்கள், இதுவரைச் செயல்பட்டு வந்த NATIONAL INFORMATICS CENTER-ன் சேவைகளில் இருந்து, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்ட ZOHO நிறுவனத்தின் பாதுகாப்பான சர்வர்கள் மூலம் இயங்கவுள்ளன.

மேலும், அரசு துறைகளின் மின்னஞ்சல் முகவரிகள் வழக்கம்போல் nic.in அல்லது gov.in எனத் தொடரும் என்றாலும், அதன் பின்னணியில் செயல்படும் ஹோஸ்டிங் மற்றும் டேட்டா மேலாண்மை அனைத்தும் ZOHO-வின் பாதுகாப்பான சர்வர்கள் மூலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசு ZOHO நிறுவனத்துடன் 7 ஆண்டுகால ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த மாற்றம் நாட்டின் “டிஜிட்டல் சுயாட்சி” முயற்சியில் ஒரு முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது. தரவு பாதுகாப்பு, தாயக மென்பொருள் வளர்ச்சி மற்றும் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களை சாந்திருப்பதைக் குறைப்பது உள்ளிட்ட அரசின் நோக்கங்களை முன்னிறுத்தியே, இந்தப் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான முதல் உத்தரவு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, துறைச் சார்ந்த அனைத்து அதிகாரிகளும் தங்கள் அலுவல் பணிகளில், ZOHO OFFICE SUITE கருவிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் WORD, EXCEL, PRESENTATION உள்ளிட்ட பணிகள் இனி இந்தியாவில் உருவாக்கப்பட்ட மென்பொருள் மூலமே மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இந்த முடிவு நாட்டின் முக்கியமான தரவுகள் அனைத்தும் வெளிநாட்டு மென்பொருள்களால் வெளிப்படுவதிலிருந்து பாதுகாக்கவும், இந்தியாவின் சொந்த டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்தவும் வழிவகுக்கும் என துறைச் சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் இது இந்திய தொழில்நுட்பத்திற்குப் பெருமை சேர்க்கும் முடிவு என்றாலும், END TO END ENCRIPTION மற்றும் சுயாதீனப் பாதுகாப்பு ஆய்வுகளை முழுமையாக மேற்கொள்வதும் அவசியம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், ZOHO இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வாடிக்கையாளர்களின் தரவுகள் அனைத்தும் நிச்சயமாகப் பாதுகாக்கப்படும் எனவும், நம்பிக்கையே தங்கள் வணிகத்தின் அடித்தளம் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் அதிவிரைவில் ZOHO சேவைகளில் END TO END ENCRIPTION அமல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

“ஆத்மநிர்பார்ப் பாரத்” திட்டத்தின் மூலம் இந்திய அரசு எடுத்துள்ள இந்த முயற்சி, நாட்டின் சுயநிறைவு பார்வைக்கு ஒரு வலிமையான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த முயற்சி எதிர்காலத்தில் உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்ற நாடுகளின் பட்டியலில், இந்தியாவை முன்னிலைப்படுத்தும் என்றும் நிபுணர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

Tags: central govermentZOHOGovernment of India's email services transition to ZOHO: A strong foundation for the country's self-fulfillment vision...!
ShareTweetSendShare
Previous Post

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

Next Post

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

Related News

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய அரசின் மின்னஞ்சல் சேவைகள் ZOHO-விற்கு மாற்றம் : நாட்டின் சுயநிறைவு பார்வைக்கான வலிமையான அடித்தளம்…!

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

மேப்பில்ஸ் செயலியை பயன்படுத்தி அஸ்வினி வைஷ்ணவ்!

ஜெர்மனி : உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையம்!

மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் – மூடப்பட்ட பள்ளிகள்!

கோவை மாமன்ற கூட்டத்தில் அதிமுக – திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா அரசு!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் – 3வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies