இந்திய அரசின் மின்னஞ்சல் சேவைகள் ZOHO-விற்கு மாற்றம் : நாட்டின் சுயநிறைவு பார்வைக்கான வலிமையான அடித்தளம்...!
Jan 14, 2026, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய அரசின் மின்னஞ்சல் சேவைகள் ZOHO-விற்கு மாற்றம் : நாட்டின் சுயநிறைவு பார்வைக்கான வலிமையான அடித்தளம்…!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் டிஜிட்டல் சுயநிலையை முன்னேற்றும் விதமாக மத்திய அரசின் அனைத்து மின்னஞ்சல் சேவைகளும் ZOHO-விற்கு மாற்றப்பட்டுள்ளன. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.

ZOHO நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், தலைமை விஞ்ஞானியாகவும் பொறுப்பு வகிக்கும் ஸ்ரீதர் வேம்பு, கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக உள்ளார். அதனடிப்படையில் தேசிய பாதுகாப்பு சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளையும் தனது நிறுவனத்தின் மூலம் அவர் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாகத் தற்போது இந்திய அரசு தனது அதிகாரபூர்வ மின்னஞ்சல் சேவைகள் அனைத்தையும், தனது சொந்த நாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ZOHO-விற்கு மாற்றியுள்ளது.

இதன் மூலம் பிரதமர் அலுவலகம் உட்பட சுமார் 12 லட்சம் அரசு பணியாளர்களின் மின்னஞ்சல்கள், இதுவரைச் செயல்பட்டு வந்த NATIONAL INFORMATICS CENTER-ன் சேவைகளில் இருந்து, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்ட ZOHO நிறுவனத்தின் பாதுகாப்பான சர்வர்கள் மூலம் இயங்கவுள்ளன.

மேலும், அரசு துறைகளின் மின்னஞ்சல் முகவரிகள் வழக்கம்போல் nic.in அல்லது gov.in எனத் தொடரும் என்றாலும், அதன் பின்னணியில் செயல்படும் ஹோஸ்டிங் மற்றும் டேட்டா மேலாண்மை அனைத்தும் ZOHO-வின் பாதுகாப்பான சர்வர்கள் மூலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசு ZOHO நிறுவனத்துடன் 7 ஆண்டுகால ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த மாற்றம் நாட்டின் “டிஜிட்டல் சுயாட்சி” முயற்சியில் ஒரு முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது. தரவு பாதுகாப்பு, தாயக மென்பொருள் வளர்ச்சி மற்றும் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களை சாந்திருப்பதைக் குறைப்பது உள்ளிட்ட அரசின் நோக்கங்களை முன்னிறுத்தியே, இந்தப் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான முதல் உத்தரவு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, துறைச் சார்ந்த அனைத்து அதிகாரிகளும் தங்கள் அலுவல் பணிகளில், ZOHO OFFICE SUITE கருவிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் WORD, EXCEL, PRESENTATION உள்ளிட்ட பணிகள் இனி இந்தியாவில் உருவாக்கப்பட்ட மென்பொருள் மூலமே மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இந்த முடிவு நாட்டின் முக்கியமான தரவுகள் அனைத்தும் வெளிநாட்டு மென்பொருள்களால் வெளிப்படுவதிலிருந்து பாதுகாக்கவும், இந்தியாவின் சொந்த டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்தவும் வழிவகுக்கும் என துறைச் சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் இது இந்திய தொழில்நுட்பத்திற்குப் பெருமை சேர்க்கும் முடிவு என்றாலும், END TO END ENCRIPTION மற்றும் சுயாதீனப் பாதுகாப்பு ஆய்வுகளை முழுமையாக மேற்கொள்வதும் அவசியம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், ZOHO இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வாடிக்கையாளர்களின் தரவுகள் அனைத்தும் நிச்சயமாகப் பாதுகாக்கப்படும் எனவும், நம்பிக்கையே தங்கள் வணிகத்தின் அடித்தளம் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் அதிவிரைவில் ZOHO சேவைகளில் END TO END ENCRIPTION அமல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

“ஆத்மநிர்பார்ப் பாரத்” திட்டத்தின் மூலம் இந்திய அரசு எடுத்துள்ள இந்த முயற்சி, நாட்டின் சுயநிறைவு பார்வைக்கு ஒரு வலிமையான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த முயற்சி எதிர்காலத்தில் உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்ற நாடுகளின் பட்டியலில், இந்தியாவை முன்னிலைப்படுத்தும் என்றும் நிபுணர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

Tags: central govermentZOHOGovernment of India's email services transition to ZOHO: A strong foundation for the country's self-fulfillment vision...!
ShareTweetSendShare
Previous Post

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

Next Post

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies