தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் "மக்கன் பேடா"!
Jan 14, 2026, 10:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

Murugesan M by Murugesan M
Oct 19, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தித்திக்கும் தீபாவளி நெருங்கும் நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆற்காடு ஸ்பெஷல் மக்கன் பேடா ஸ்வீட் தயாரிப்பு சூடுபிடித்துள்ளது. இந்த ஸ்வீட் ஆற்காட்டை விட்டா வேறு எங்கும் கிடைக்காது என்பதுதான் இதோட ஸ்பெஷல்.

330 ஆண்டுகால வரலாற்றை ஒரு ஸ்வீட் சுமந்து நிற்கிறது என்றால் நம்ப முடிகிறதா… நம்பித்தான் ஆகனும்,

வரலாற்றில் மிகப் பழமையான நகரமாக அறியப்படும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, பிரியாணிக்கு மட்டுமல்ல “ஸ்பெஷல் மக்கன் பேடா”வுக்கும் பெயர் போனது. உருது மொழியில் மக்கன் என்றால் நயம் என்றும், பேடா என்றால் பாகில் ஊறவைக்கும் இனிப்பு என்று பொருள்படும்.

அதற்கேற்ப ருசியாகவும், தொண்டையில் நழுவிச் செல்லும் அளவுக்கு மென்மையாகவும் இருப்பதால் மக்கன் பேடா என்ற பெயர் வந்தது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்…. தீபாவளி நெருங்கி வரும் நிலையில், ஆற்காட்டில் ஸ்பெஷல் மக்கன் பேடா ஸ்வீட் தயாரிப்பும், விற்பனையும் களைகட்ட தொடங்கியுள்ளது.

நவாப் ஆட்சிக்காலத்தில் மன்னருக்கு வழக்கமான இனிப்புகள் சலித்துப்போக, புதுமையான இனிப்பு வகையைத் தயார் செய்யும்படி சமையற் கலைஞர்களுக்கு உத்தரவிடுகிறார். அதன்படி, அரபு நாடுகள் மற்றும் இந்தியாவில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதுதான் இந்த மக்கன் பேடா.

41 ஆண்டுகளாக மக்கன் பேடா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மாஸ்டர் மேகநாதன் மக்கன் பேடா செய்முறை விவரிக்கும் விதத்தைப் பார்த்தேலே நாவில் எச்சில் ஊறுகிறது… குங்குமப்பூ, தேனில் ஊறவைத்த அத்திப்பழம், பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ருட், பேரிச்சை, வெள்ளரி மற்றும் தர்பூசணி விதை, ஏலக்காய், உலர்த் திராட்சை, ஜாதிக்காய், ஜாபத்திரி போன்ற 15 பொருட்களுடன் இன்னும் பல கலவைகளைச் சேர்த்து மக்கன் பேடா தயாரிக்கப்படுவதாகக் கூறுகிறார் மேகநாதன்.

அன்றைய காலத்தில் மன்னரின் சமையல் அறையில் வேலைப் பார்த்தவர்களின் வழிவந்தவர்கள் தான், ஆற்காட்டின் மண், மனம், சுவை மாறாமல் மக்கன் பேடா தயாரித்து விற்பனைச் செய்து வருகிறார்கள்.

ஆற்காடு ஸ்பெஷன் மக்கன் பேடாவின் சுவைக்கெனத் தனி ரசிகர்ப் பட்டாளமே உள்ளது… ஆற்காட்டில் மட்டுமே கிடைக்கும் என்பதால், தீபாவளிக்காக வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்… அதுமட்டுமின்றி தீபாவளி பரிசாக மக்கள் கடல் கடந்தும் அனுப்பி வைக்கிறார்கள்

என்னங்க… இந்தத் தீபாவளிய ஆற்காடு ஸ்பெஷல் மக்கன் பேடாவோட கொண்டாட தயாரா.

Tags: Arcot Special "Makan Peda" for Diwaliதித்திக்கும் தீபாவளிமக்கன் பேடாdiawali
ShareTweetSendShare
Previous Post

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

Next Post

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies