இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை பெரிய தடையாக இருக்காது என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய அவர், உலகப் பொருளாதாரத்தில் பல சவால்கள் இருந்தும், இந்தியா கடந்த ஆண்டு 8 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளதாகக் கூறினார்.
இந்தியா பெரும்பாலும் உள்நாட்டு பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறிய சஞ்சய் மல்ஹோத்ரா, அமெரிக்கா வரிவிதிப்பு நடவடிக்கைகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.
கொரோனா மற்றும் ரஷ்யா – உக்ரைன் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விரைவாக மீண்டு வந்துள்ளதாகவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.