திக்...திக்..திக்...சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் - சிறப்பு தொகுப்பு!
Oct 18, 2025, 09:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Oct 18, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் திகில் படங்களில் வரும் பாழடைந்த பங்களா போல் காட்சியளிக்கும் வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்பில் பொதுமக்கள் வாழவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆங்காங்கே தேங்கியிருக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டை எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள நாராயண நகர் மற்றும் குறிஞ்சி நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. 10 அலகுகளில் 400க்கும் அதிகமான வீடுகளை உள்ளடக்கியிருக்கும் இந்த குடியிருப்பு மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்புகளை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை தற்போதுவரை நிறைவேறாமல் இருப்பதாக குடியிருப்புவாசதிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திகில் திரைப்படங்களில் வரும் பழமையான கட்டடங்களை போல காட்சியளிக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடிநீர் தொடங்கி எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிலும் குறிப்பாக அடிப்படை வசதிகளில் ஒன்றான கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாத காரணத்தினால், ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயமும் எழுந்துள்ளது.

கழிவுநீர் கால்வாய் தண்ணீரை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், சில நேரங்களில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதிலும் அவ்வப்போது இடிந்து விழும் மேற்கூரைகள் மற்றும் பால்கனிகளால் சிலர் காயமடைந்திருக்கும் நிலையில் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்கக் கூட முடியாத அவலநிலைக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த நிலையில் இருக்கும் குடியிருப்பை புணரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்கான தொடக்கப்பணிகள் கூட இன்றளவும் நடைபெறவில்லை என்பதே குடியிருப்புவாசிகளின் பிரதான குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.

குடியிருப்புவாசிகளிடம் உரிய நேரத்தில் உரிய வாடகையை பெறும் வீட்டுவசதிவாரியம் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது கடமை என்பதை உணர்ந்து உடனடியாக சிதிலமடைந்த குடியிருப்புகளை புனரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: salemKurinji Nagarhousing board apartmentsdilapidated bungalowsNarayana Nagar
ShareTweetSendShare
Previous Post

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

Next Post

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

Related News

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies