திக்...திக்..திக்...சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் - சிறப்பு தொகுப்பு!
Jul 29, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 18, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் திகில் படங்களில் வரும் பாழடைந்த பங்களா போல் காட்சியளிக்கும் வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்பில் பொதுமக்கள் வாழவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆங்காங்கே தேங்கியிருக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டை எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள நாராயண நகர் மற்றும் குறிஞ்சி நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. 10 அலகுகளில் 400க்கும் அதிகமான வீடுகளை உள்ளடக்கியிருக்கும் இந்த குடியிருப்பு மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்புகளை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை தற்போதுவரை நிறைவேறாமல் இருப்பதாக குடியிருப்புவாசதிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திகில் திரைப்படங்களில் வரும் பழமையான கட்டடங்களை போல காட்சியளிக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடிநீர் தொடங்கி எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிலும் குறிப்பாக அடிப்படை வசதிகளில் ஒன்றான கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாத காரணத்தினால், ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயமும் எழுந்துள்ளது.

கழிவுநீர் கால்வாய் தண்ணீரை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், சில நேரங்களில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதிலும் அவ்வப்போது இடிந்து விழும் மேற்கூரைகள் மற்றும் பால்கனிகளால் சிலர் காயமடைந்திருக்கும் நிலையில் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்கக் கூட முடியாத அவலநிலைக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த நிலையில் இருக்கும் குடியிருப்பை புணரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்கான தொடக்கப்பணிகள் கூட இன்றளவும் நடைபெறவில்லை என்பதே குடியிருப்புவாசிகளின் பிரதான குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.

குடியிருப்புவாசிகளிடம் உரிய நேரத்தில் உரிய வாடகையை பெறும் வீட்டுவசதிவாரியம் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது கடமை என்பதை உணர்ந்து உடனடியாக சிதிலமடைந்த குடியிருப்புகளை புனரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: salemKurinji Nagarhousing board apartmentsdilapidated bungalowsNarayana Nagar
ShareTweetSendShare
Previous Post

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

Next Post

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies