இந்தியாவின் பாதுகாப்பில் மைல்கல் : உள்நாட்டில் தயாரான அதிநவீன பாராசூட் !
Mar 15, 2026, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் பாதுகாப்பில் மைல்கல் : உள்நாட்டில் தயாரான அதிநவீன பாராசூட் !

Murugesan M by Murugesan M
Oct 19, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர் மற்றும் அவசரநிலை காலங்களில் வெளிநாட்டு உபகரணங்களை நம்பி இருக்கும் சூழலைக் குறைக்கும் வகையில் உள்நாட்டில் நவீன பாராசூட் உருவாக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…

மிலிட்டரி காம்பட் பாராசூட் சிஸ்டம் எனப்படும் இந்திய பாராசூட் அமைப்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்மூலம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 32,000 அடி உயரத்தில் இருந்து நடைபெற்ற போர்முறை Free Fall சோதனையில் இந்த அமைப்பு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்திய விமானப்படை வீரர்கள் இந்தச் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். மிலிட்டரி காம்பட் பாராசூட் சிஸ்டம் அமைப்பின் வலுவான இந்தத் திறன், இந்திய விமானப் படையின் நம்பகத்தன்மை மற்றும் மேம்பட்ட வடிவமைப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது.

தற்போது வரை 25,000 அடி உயரத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடிய திறனுடன் ஒரே பாராசூட் அமைப்பாக மிலிட்டரி காம்பட் பாராசூட் சிஸ்டம் இந்திய ஆயுதப்படைகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தப் பாராசூட் அமைப்பு, ஆக்ராவில் அமைந்துள்ள Aerial Delivery Research and Development Establishment மற்றும் பெங்களூருவில் உள்ள Defence Bioengineering and Electromedical Laboratoryஆகிய DRDO ஆய்வகங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.

மிலிட்டரி காம்பட் பாராசூட் சிஸ்டம் அமைப்பு, மிதமான வேகத்துடன் இறங்கும் திறன் மற்றும் மேம்பட்ட திசை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பாரா ட்ரூப்பர்கள் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறலாம்.

முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட உயரத்தில் பாராசூட்டை திறந்து, துல்லியமாக வழிநடத்தி, குறிக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பாகத் தரையிறங்க முடியும். மேலும், இந்த அமைப்பு Navigation with Indian Constellation தொழில்நுட்பத்துடன் நெருக்கமாக உள்ளது. இதனால், எந்தவொரு வெளிநாட்டு அமைப்பினையும் சார்ந்திராமல், தேவைக்கேற்ப சுயமாகப் பயன்படுத்தும் சுதந்திரத்தை உறுதி செய்கிறது.

இதுவே, வெளிநாடுகளின் தலையீடு அல்லது சேவை செய்ய விருப்பமில்லாதது போன்ற பிரச்சனைகளிலிருந்து நம் சுயதிறனை பாதுகாக்கும் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது. இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் பாராசூட் அமைப்புகளை, இந்திய ஆயுதப்படைகளில் சேர்ப்பதற்கான புதிய வாய்ப்புகளை இந்த வெற்றி உருவாக்கி இருக்கிறது. இது வெளி நாடுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும்.

அதிக பயன்பாட்டைப் பிரச்சினைகளின்றி உறுதிப்படுத்தும். போர் மற்றும் அவசரநிலை காலங்களில் வெளிநாட்டு உபகரணங்களை நம்பி இருக்கும் சூழலைக் குறைக்கும் வகையிலும் மிலிட்டரி காம்பட் பாராசூட் சிஸ்டம் உதவும் என்பதுதான் ஹைலைட்.

இந்த வெற்றிகரமான சாதனைக்காக DRDO, ஆயுதப்படைகள் மற்றும் தொழில்துறையினருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறனில் ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மிலிட்டரி காம்பட் பாராசூட் சிஸ்டம் விமானப் படையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் முழுமையான தன்னிறைவு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது… இந்தியாவின் அடுத்த கட்ட அத்தியாயமாகவும் திகழ்கிறது என்பதுதான் இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கிறது.

Tags: Milestone in India's security: Indigenously developed state-of-the-art parachuteIndianewsindian armydrdoDRDO Chairman
ShareTweetSendShare
Previous Post

சீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன? : ஆபத்தாக மாறும் அஸ்திரா-2 ஏவுகணை!

Next Post

உச்சக்கட்ட அவமானத்தில் பாகிஸ்தான் : 93000 பேண்ட் விழா 2.O கொண்டாடிய ஆப்கன்!

Related News

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies