வங்கக்கடலில் புயல் சின்னம் வலுவடைந்து வரும் நிலையில், மரக்காணத்தை சுற்றியுள்ள 19 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் நிலவும் மோசமான வானிலை காரணமாக வரும் 25ம் தேதிவரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் 19 மீனவ கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல், படகுகளைப் பாதுகாப்பாகக் கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.