AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா - கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!
Jan 13, 2026, 11:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவீன உலகில் ஏ.ஐ. தொழில்நுட்பம் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பரவலாக பயனர்களை பெற்று வருகிறது. வளர்ந்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் நாட்டு மக்களுக்கு வரும் ஆபத்துகளை குறைக்க கடுமையான விதிகளை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய உயரத்தை தொட்டுவரும் நிலையில், ஏ.ஐ. தளங்களை ஒழுங்குபடுத்த இந்தியா புதிய விதிகளை வகுக்கத் திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி இணைய பயனர்களைக் கொண்ட, பல இன, மொழி, மதத்தினரைக் கொண்ட பரந்த நாட்டில், போலியான செய்திகள், கடுமையான மோதல்களைத் தூண்டிவிடும் அபாயம் உள்ளது.

பயனர்களுக்குத் தீங்கு விளைவித்தல், தவறான தகவல்களை பரப்புதல், தேர்தல்களை கையாளுதல் அல்லது தனிநபர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்தல் போன்றவற்றுக்காக உருவாக்கப்படும் AI கருவிகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளது.

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட டீப் ஃபேக்குகள் மற்றும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட உள்ளடக்கத்தால் ஏற்படும் தீங்கைத் தவிர்க்கும் நோக்கில், ஐ.டி. அமைச்சகம் 2021ம் ஆண்டு ஐ.டி. விதிகளில் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

இது பயனர்கள் செயற்கை எது, உண்மை எது என்ற உள்ளடக்கத்தை வேறுபடுத்திப் பார்க்க உதவும், தெளிவான லேபிளிங்கை கட்டாயமாக்குகிறது. எனவேதான் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய தெளிவான லேபிளிங்கை ஐ.டி. அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.

புதிய விதிகளின்படி, ஏ.ஐ. உருவாக்கிய உள்ளடக்கத்தை, வீடியோவின் பரப்பளவில் குறைந்தது 10 சதவிகிதமும், ஆடியோ கிளிப்பில் தொடக்கத்தில் 10 சதவிகிதத்தையும் உள்ளடக்கிய குறிப்புகளை லேபிளிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது OpenAI, Meta, X மற்றும் Google போன்றவற்றின் மீது அதிக பொறுப்புகளைச் சுமத்துகிறது. பதிவேற்றப்பட்ட தகவல்கள் AI-யால் உருவாக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்களைச் சமூக ஊடக நிறுவனங்கள் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதிகள் பயனர்கள் எதிர்கொள்ளும் அனைத்து AI உருவாக்கிய ஊடகங்களுக்கும் புலப்படும் லேபிளிங், மெட்டாடேட்டா கண்டறியும் தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது.

இதுதொடர்பாக நவம்பர் 6ம் தேதிக்குள் பரிந்துரைகளை வழங்குமாறு பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இந்தியா உலகளவில் இரண்டாவது பெரிய சந்தையாக உள்ளது.

கடந்த ஆண்டில் இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறியிருந்தார். டீப்ஃபேக்குள் தொடர்பான வழக்குளை நீதிமன்றங்கள் ஏற்கனவே விசாரித்து வருகின்றன. இந்த நிலையில், வீடியோக்களில் 10 சதவிகித லேபிளிங், சர்வதேச அளவில் தெரிவுநிலை தரத்தைப் பரிந்துரைக்கும் முதல் வெளிப்படையான முயற்சிகளின் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும், சீனாவில் இது போன்ற ஏ.ஐ. வீடியோக்கள் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதனை தவிர்க்கப் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: AI technologyஇந்தியாIndia to curb AI platforms - plans to impose strict rules
ShareTweetSendShare
Previous Post

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

Next Post

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies