கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!
Oct 27, 2025, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

Web Desk by Web Desk
Oct 26, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டம் கொத்தன்குளத்தில் கொட்டப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுக் கொத்தன்குளத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்தக் கொத்தன்குளம், சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குப் பாசன ஆதாரமாக விளங்கிவருகிறது.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதிலும், விவசாயத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றி வந்த கொத்தன்குளம் கடந்த சில ஆண்டுகளாகவே குப்பைகளைக் கொட்டும் குளமாக மாறி வருகிறது.

கோபாலசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் இந்தக் கொத்தன்குளம் மட்டுமல்லாது அதன் பாசனப்பகுதியிலும் கொட்டப்பட்டு வருகிறது.

அதில் இறைச்சிக் கழிவுகளும், பயன்படுத்திய மருத்துவக் கழிவுகளும் கலந்திருப்பதால் குளத்தின் நீர் நேரடியாக நஞ்சாகிக் கொண்டிருப்பதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பருவமழை தொடங்கிய நிலையில் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் மழையால், குப்பைக் குவியல்களில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் பன்மடங்கு அதிகரித்து பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை உள்ளாக்கியுள்ளது. நீண்ட நெடும் நாட்களாகத் தேங்கியிருக்கும் குப்பைகளில் இருந்து டெங்கு, மலேரியா போன்ற நோய்த்தொற்று உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கொட்டப்படும் கழிவுகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுவதால் மூச்சுத்திணறலுக்கு உள்ளாவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் மட்டுமன்றி விவசாயத்தை பாதுகாக்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டும் குப்பைகள் கொட்டும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் கொத்தன் குளத்தை முறையாகச் சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு முழுமையாகக் கொண்டு வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tamil NaduFarmers in tears: Irrigation pond poisoned by medical wasteகண்ணீர் வடிக்கும் விவசாயிகள்நஞ்சான பாசன குளம்
ShareTweetSendShare
Previous Post

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

Next Post

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Related News

திருப்பரங்குன்றம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்த ரசிகர்!

​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்!

திருச்சி அருகே ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து!

கும்பகோணத்தில் கனமழை : சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர்!

மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்!

ரூ.1,000 பந்தயத்திற்காக கொசஸ்தலை ஆற்றில் குதித்த இருவர் மாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐநா உலகளாவிய பொது நலனுக்கானது என்பதை உணர வேண்டும் : இந்தியா

உத்தர பிரதேசம் – தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த குடியரசுத் தலைவர்!

கஞ்சா போதையில் பட்டாக் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

காங்கேயம் அருகே விவசாயி கட்டையால் அடித்துக் கொலை!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

மழையில் ரோடு போடும் திமுக அரசு!

வங்கக்கடலில் உருவானது ‘மோந்தா’ புயல்!

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் – ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம்!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

நெற்பயிர்கள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசே காரணம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies