கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!
Jan 14, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2025, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய இளையோருக்கான கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த நிலையில், இந்திய அணியைத் துணை கேப்டனாக வழிடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார் கண்ணகி நகர் கார்த்திகா…. யார் அவர் தற்போது பார்க்கலாம்.

பஹ்ரைன் நாட்டில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்து நிற்கிறது. 18 வயதுக்குட்பட்டோருக்கான கபடி இறுதிப்போட்டியில் ஈரானை 75-க்கு 21 புள்ளிக் கணக்கில் வீழ்த்தித் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய மகளிர் அணி.

இந்திய அணியைத் துணை கேப்டனாக வழிநடத்தியவர் சென்னை கண்ணகி நகர் புயல் கார்த்திகா. ஏழ்மையான குடும்பப் பின்னணியில், வறுமையின் பிடியிலும் இடைவிடாத பயிற்சியால் இந்திய அணியில் இடம்பிடித்த கார்த்திகா, தனது அபாரமான ரைடு மூலம் ஒட்டுமொத்த, ஈரான் அணியைத் தெறிக்க விட்டதோடு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய கார்த்திகாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் வெற்றியில் கார்த்திகாவின் பங்களிப்பைப் பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார். தங்கம் வென்று திரும்பிய கார்த்திகாவுக்கு கண்ணகி நகர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாகவும் மாலை கிரீடம், பொன்னாடை அணிவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார் கார்த்திகா. அப்போது வழிநெடுக கண்ணகி நகர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் சூழ்ந்து கார்த்திகாவை கொண்டாடிய விதம், கார்த்திகாவை எப்படி நேசிக்கிறார்கள் என்பதை கண்ணுக்கு எதிரே வெளிப்படுத்தியது.

அப்போது தனது பயிற்சியாளர் ராஜி-க்கு தனது தங்கப்பதக்கத்தை அளித்து மகிழ்ந்தார் கார்த்திகா. கண்ணகி நகர் மக்கள் அனைவரும் தன்னை ஆதரித்ததாகக் கூறிய கில்லி வீராங்கனை கார்த்திகா, கண்ணகி நகரில் இருந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் தனது லட்சியம் என்கிறார் உற்சாகமாக.

2000 ஆண்டில் இருந்து கண்ணகி நகரில் வசிப்பதாகக் கூறிய கார்த்திகாவின் தாயார், 6 வயது முதல் கார்த்திகா கஷ்டப்பட்டு கபடி பயிற்சி பெற்று வருவதாகக் கூறினார்…பெற்றோர்கள் பெண் குழந்தைகளை நம்பி வெளியே அனுப்ப வேண்டும் என்றும், பெற்றோர் அளிக்கும் ஊக்கம்தான் குழந்தைகளுக்கு முக்கியம் என்று கூறுகிறார் கார்த்திகாவின் தாயார் சரண்யா.

அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் கார்த்திகாவின் வளர்ச்சிக்கு அரசு உதவ வேண்டும் எனக் கண்ணகி நகர் பொதுமக்கள் கூறினர். அதே நேரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கண்ணகி நகர் மக்களுக்கு வேண்டிய அனைத்தும் செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளதாகத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கபடி எக்ஸ்பர்ட் பயிற்சியாளர் கவிதா தெரிவித்துள்ளார்.

கார்த்திகா பயிற்சி செய்யும் மைதானம் மழை காலங்களில் முழுமையாகத் தண்ணீர் சூழ்ந்து விடும், எனவே பயிற்சி மேற்கொள்வதற்கு உரிய இடத்தை அரசு ஏற்படுத்திக் கொடுத்தால், இன்னும் ஆயிரம் கார்த்திகாக்கள் உருவாவார்கள் என்பது கண்ணகி நகர் மக்களின் கோரிக்கை.

கண்ணகி நகர் என்றாலே தவறான பார்வை இருக்கும் நிலையில், அந்தப் பார்வையை மாற்றிப் புது அடையாளம் கொடுத்திருக்கிறார் கார்த்திகா என மெச்சுகின்றனர் கண்ணகி நகர் பொதுமக்கள்.

Tags: kabadi gamekabadiKarthikawho won gold in Kabaddi: The lioness of Kannagi Nagarகண்ணகி நகர் சிங்கப்பெண்தங்கம் வென்ற கார்த்திகாwomens kabadi
ShareTweetSendShare
Previous Post

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

Next Post

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies