தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!
Jan 14, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 28, 2025, 09:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதிய நிலையில், 3 நிபுணர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்தது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். நெல் குவியலை அள்ளி ஈரத்தன்மையை அறிந்த அதிகாரிகள், ஆய்வகத்தில் சோதனை செய்வதற்காக 3 வகையான நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர்.

இதேபோல் சீர்காழி அடுத்த பழைய பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பி.கே.சிங் தலைமையிலான மத்திய குழுவினர் நெல்மணிகளின் சேதங்களை பதிவு செய்து கொண்டு, நெல்லின் தன்மை மற்றும் ரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நெல்லின் தரம் மற்றும் ஈரப்பத அளவு குறித்து இயந்திரத்தின் மூலம் மத்திய குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கந்தமங்கலம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பி.கே.சிங் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது நெல்மணிகளின் சேதங்களை பதிவு செய்து கொண்ட குழுவினர் நெல்லின் தன்மை, அதன் ரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை வாடிப்பட்டி அருகேயுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கட்டக்குளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு வருகை தந்த குழுவினர், குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரத்தன்மையை ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து ஆய்வகத்தில் சோதனை செய்வதற்காக நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர். அப்போது, நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தி கொள்முதல் செய்ய மத்திய குழுவினரிடம் பெண்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags: paddy procured centerkanchipuramtamil nadu governmentManimangalamcentral expert team inspection
ShareTweetSendShare
Previous Post

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

Next Post

பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies