தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!
Oct 28, 2025, 11:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

Web Desk by Web Desk
Oct 28, 2025, 09:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதிய நிலையில், 3 நிபுணர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்தது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். நெல் குவியலை அள்ளி ஈரத்தன்மையை அறிந்த அதிகாரிகள், ஆய்வகத்தில் சோதனை செய்வதற்காக 3 வகையான நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர்.

இதேபோல் சீர்காழி அடுத்த பழைய பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பி.கே.சிங் தலைமையிலான மத்திய குழுவினர் நெல்மணிகளின் சேதங்களை பதிவு செய்து கொண்டு, நெல்லின் தன்மை மற்றும் ரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நெல்லின் தரம் மற்றும் ஈரப்பத அளவு குறித்து இயந்திரத்தின் மூலம் மத்திய குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கந்தமங்கலம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பி.கே.சிங் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது நெல்மணிகளின் சேதங்களை பதிவு செய்து கொண்ட குழுவினர் நெல்லின் தன்மை, அதன் ரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை வாடிப்பட்டி அருகேயுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கட்டக்குளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு வருகை தந்த குழுவினர், குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரத்தன்மையை ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து ஆய்வகத்தில் சோதனை செய்வதற்காக நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர். அப்போது, நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தி கொள்முதல் செய்ய மத்திய குழுவினரிடம் பெண்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags: paddy procured centerkanchipuramtamil nadu governmentManimangalamcentral expert team inspection
ShareTweetSendShare
Previous Post

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

Next Post

பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Related News

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

நாகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயணம்!

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சூரசம்ஹார விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தலைமை தேர்தல் ஆணையம்

பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies