தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!
Sep 14, 2026, 02:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 28, 2025, 09:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதிய நிலையில், 3 நிபுணர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்தது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். நெல் குவியலை அள்ளி ஈரத்தன்மையை அறிந்த அதிகாரிகள், ஆய்வகத்தில் சோதனை செய்வதற்காக 3 வகையான நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர்.

இதேபோல் சீர்காழி அடுத்த பழைய பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பி.கே.சிங் தலைமையிலான மத்திய குழுவினர் நெல்மணிகளின் சேதங்களை பதிவு செய்து கொண்டு, நெல்லின் தன்மை மற்றும் ரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நெல்லின் தரம் மற்றும் ஈரப்பத அளவு குறித்து இயந்திரத்தின் மூலம் மத்திய குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கந்தமங்கலம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பி.கே.சிங் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது நெல்மணிகளின் சேதங்களை பதிவு செய்து கொண்ட குழுவினர் நெல்லின் தன்மை, அதன் ரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை வாடிப்பட்டி அருகேயுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கட்டக்குளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு வருகை தந்த குழுவினர், குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரத்தன்மையை ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து ஆய்வகத்தில் சோதனை செய்வதற்காக நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர். அப்போது, நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தி கொள்முதல் செய்ய மத்திய குழுவினரிடம் பெண்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags: paddy procured centerkanchipuramtamil nadu governmentManimangalamcentral expert team inspection
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

Next Post

பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies