தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!
Jul 30, 2026, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 28, 2025, 09:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதிய நிலையில், 3 நிபுணர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்தது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். நெல் குவியலை அள்ளி ஈரத்தன்மையை அறிந்த அதிகாரிகள், ஆய்வகத்தில் சோதனை செய்வதற்காக 3 வகையான நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர்.

இதேபோல் சீர்காழி அடுத்த பழைய பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பி.கே.சிங் தலைமையிலான மத்திய குழுவினர் நெல்மணிகளின் சேதங்களை பதிவு செய்து கொண்டு, நெல்லின் தன்மை மற்றும் ரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நெல்லின் தரம் மற்றும் ஈரப்பத அளவு குறித்து இயந்திரத்தின் மூலம் மத்திய குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கந்தமங்கலம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பி.கே.சிங் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது நெல்மணிகளின் சேதங்களை பதிவு செய்து கொண்ட குழுவினர் நெல்லின் தன்மை, அதன் ரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை வாடிப்பட்டி அருகேயுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கட்டக்குளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு வருகை தந்த குழுவினர், குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரத்தன்மையை ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து ஆய்வகத்தில் சோதனை செய்வதற்காக நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர். அப்போது, நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தி கொள்முதல் செய்ய மத்திய குழுவினரிடம் பெண்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags: paddy procured centerkanchipuramtamil nadu governmentManimangalamcentral expert team inspection
ShareTweetSendShare
Previous Post

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

Next Post

பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies