மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் "பாரத் டாக்சி"!
Mar 15, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

Murugesan M by Murugesan M
Oct 30, 2025, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா தனது முதல் கூட்டுறவு டாக்சி சேவையாக ‘பாரத் டாக்சி’-யை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓட்டுநர்களுக்கு முழு வருமான உரிமையையும், பயணிகளுக்கு நியாயமான கட்டணத்துடன் நம்பகமான சேவையையும் வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், UBER மற்றும் OLA-வுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

இந்தியாவின் முதல் கூட்டுறவு டாக்சி சேவையான “பாரத் டாக்சி”, UBER, OLA போன்ற தனியார் டாக்சி நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தேசிய மின்ஆட்சி பிரிவு (NeGD) இணைந்து உருவாக்கியுள்ள இந்தச் சேவை, ஓட்டுநர்களுக்குப் பங்குதாரர் என்ற உரிமையையும், 100 சதவீத வருமானத்தையும் வழங்குகிறது.

அதேபோல, பயணிகளுக்கு நியாயமான, நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுடன் நம்பகமான சேவையும் பாரத் டாக்சி மூலம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. DIGILOCKER, UMANG போன்ற தேசிய தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ள பாரத் டாக்சி, வரும் நவம்பரில் டெல்லியில் தொடங்கப்பட்டு பின்னர் 20 நகரங்களில் விரிவடையவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் பாரத் டாக்சியில் ஓட்டுநர்கள் கூட்டுறவு உறுப்பினர்களாகவும், பங்குதாரர்களாகவும் சேர முடியும். தனியார் நிறுவனங்களைப் போலப் பெரிய அளவில் கட்டண விகிதம் பெறப்படமாட்டாது என்பதால், ஓட்டுநர்கள் தங்கள் வருமானத்தில் இருந்து எந்தவித கமிஷனையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

பாரத் டாக்சி சேவையில் நியாயமான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டண சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாலும், அதிக தேவை காலங்களிலும் இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என்பதாலும், பயணிகள் மத்தியில் இது வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோலத் தேசிய டிஜிட்டல் தளங்களுடன் பாரத் டாக்சி சேவை இணைக்கப்பட்டுள்ளதால், அடையாள சரிபார்ப்பு மற்றும் சேவை வழங்குதல் எளிமையாக இருக்கும் எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் தொடங்கவுள்ள இந்தத் திட்டத்தில் சாரதி என்ற பெயரில் முதற்கட்டமாக, 5 ஆயிரம் ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் இணைக்கப்படவுள்ளனர். அடுத்தகட்டமாக மும்பை, புனே, போபால், லக்னோ, ஜெய்பூர் உள்ளிட்ட 20 நகரங்களுக்கு இந்தச் சேவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியால் டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் தொழிலுக்கான உரிமையை முழுமையாகப் பெறவும், பயணிகள் மலிவு விலையில் பயணங்களை மேற்கொண்டு பயனடையவும் மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

Tags: பாரத் டாக்சிtravelscarolaUBERThe central government's first cooperative taxi service: "Bharat Taxi" to compete with UBER
ShareTweetSendShare
Previous Post

புளூட்டோனியம் ஒப்பந்தத்தை ரத்து செய்த ரஷ்யா!

Next Post

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் Al போர் விமானம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies