மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் "பாரத் டாக்சி"!
Jul 28, 2026, 09:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

Murugesan M by Murugesan M
Oct 30, 2025, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா தனது முதல் கூட்டுறவு டாக்சி சேவையாக ‘பாரத் டாக்சி’-யை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓட்டுநர்களுக்கு முழு வருமான உரிமையையும், பயணிகளுக்கு நியாயமான கட்டணத்துடன் நம்பகமான சேவையையும் வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், UBER மற்றும் OLA-வுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

இந்தியாவின் முதல் கூட்டுறவு டாக்சி சேவையான “பாரத் டாக்சி”, UBER, OLA போன்ற தனியார் டாக்சி நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தேசிய மின்ஆட்சி பிரிவு (NeGD) இணைந்து உருவாக்கியுள்ள இந்தச் சேவை, ஓட்டுநர்களுக்குப் பங்குதாரர் என்ற உரிமையையும், 100 சதவீத வருமானத்தையும் வழங்குகிறது.

அதேபோல, பயணிகளுக்கு நியாயமான, நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுடன் நம்பகமான சேவையும் பாரத் டாக்சி மூலம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. DIGILOCKER, UMANG போன்ற தேசிய தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ள பாரத் டாக்சி, வரும் நவம்பரில் டெல்லியில் தொடங்கப்பட்டு பின்னர் 20 நகரங்களில் விரிவடையவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் பாரத் டாக்சியில் ஓட்டுநர்கள் கூட்டுறவு உறுப்பினர்களாகவும், பங்குதாரர்களாகவும் சேர முடியும். தனியார் நிறுவனங்களைப் போலப் பெரிய அளவில் கட்டண விகிதம் பெறப்படமாட்டாது என்பதால், ஓட்டுநர்கள் தங்கள் வருமானத்தில் இருந்து எந்தவித கமிஷனையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

பாரத் டாக்சி சேவையில் நியாயமான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டண சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாலும், அதிக தேவை காலங்களிலும் இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என்பதாலும், பயணிகள் மத்தியில் இது வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோலத் தேசிய டிஜிட்டல் தளங்களுடன் பாரத் டாக்சி சேவை இணைக்கப்பட்டுள்ளதால், அடையாள சரிபார்ப்பு மற்றும் சேவை வழங்குதல் எளிமையாக இருக்கும் எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் தொடங்கவுள்ள இந்தத் திட்டத்தில் சாரதி என்ற பெயரில் முதற்கட்டமாக, 5 ஆயிரம் ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் இணைக்கப்படவுள்ளனர். அடுத்தகட்டமாக மும்பை, புனே, போபால், லக்னோ, ஜெய்பூர் உள்ளிட்ட 20 நகரங்களுக்கு இந்தச் சேவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியால் டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் தொழிலுக்கான உரிமையை முழுமையாகப் பெறவும், பயணிகள் மலிவு விலையில் பயணங்களை மேற்கொண்டு பயனடையவும் மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

Tags: பாரத் டாக்சிtravelscarolaUBERThe central government's first cooperative taxi service: "Bharat Taxi" to compete with UBER
ShareTweetSendShare
Previous Post

புளூட்டோனியம் ஒப்பந்தத்தை ரத்து செய்த ரஷ்யா!

Next Post

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் Al போர் விமானம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies