தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்குகிறது.
சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அதன்படி 234 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நாளை முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதேபோல் புதுச்சேரியிலும் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்குகிறது.
இதில் வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை அரசியல் கட்சிகளின் ஏஜன்டுகளுடன் இணைந்து, அரசு ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
இதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன.
சிறப்பு திருத்தத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் மற்றும் இரண்டு இடங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே நீக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
















