DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!
Jan 14, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

ANTI-RADIATION ஏவுகணை தொழில்நுட்பத்தில் தன்னாட்சி அடைந்த இந்தியா!

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 06:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

DRDO உருவாக்கியுள்ள RUDRAM-1 ஏவுகணைமூலம், எதிரி நாடுகளின் ரேடார் அமைப்புகளைத் தாக்கி அழிக்கும் ANTI-RADIATION ஏவுகணை தொழில்நுட்பத்தில், இந்தியா தன்னாட்சியை அடைந்துள்ளது. சுகோய்-30 எம்.கே.ஐ ரக போர் விமானத்திலிருந்து ஏவப்படும் இந்த ரக ஏவுகணைகள் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம்வரை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது.

வான்வழி போர் நடவடிக்கைகளின்போது, எதிரியின் ரேடார் மற்றும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகளைச் செயலிழக்க செய்ய உருவாக்கப்பட்ட சிறப்பு ஆயுதங்களாக “ANTI-RADIATION MISSILES” உள்ளன. இவை எதிரிகளின் ரேடாரையும், வான்வழி ஏவுகணை கண்காணிப்பு அமைப்புகளையும் கண்டறிந்து தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சொந்த நாட்டு போர் விமானங்கள் பாதுகாப்பாகச் செயல்பட இந்த ஏவுகணைகள் வழிவகை செய்கின்றன.

இந்த வகை ஏவுகணைகள் SUPPRESSION OF ENEMY AIR DEFENCES அல்லது SEAD என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இந்த வகை ஏவுகணைகள் ரேடாரில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளைக் கண்டுபிடித்து அதனை இலக்காகக் கொள்கின்றன. இந்த ஏவுகணைகள் ஏவப்பட்ட பின் ரேடார் அலைகள் நிறுத்தப்படாலும், மேம்பட்ட GPS மாடல் அல்லது INERTIAL NAVIGATION தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதனால் இலக்கைத் துல்லியமாக தாக்க இயலும்.

அதேபோல, சில ஏவுகணைகளில் இருதரப்பு தொடர்பு வசதி இருப்பதால், பறக்கும்போதே அதன் இலக்கை மாற்றவோ புதுப்பிக்கவோ முடியும். உலகம் முழுவதும் உள்ள ANTI-RADIATION ஏவுகணைகளில் அமெரிக்காவின் AGM-88 SERIES ஏவுகணைகளே மிக முன்னேற்றமானதாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் AGM-88E AARGM மாடல் ஏவுகணைகள் தனித்துவம் வாய்ந்தது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரக ஏவுகணைகள் GPS வழிகாட்டி, மில்லிமீட்டர் அலை ரேடார் மற்றும் ரேடார் அலைகள் நிறுத்தப்பட்டாலும் இலக்கைத் தாக்கும் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளன. அமெரிக்காவின் உயர்ரக போர் விமானங்களான F-16 மற்றும் F/A-18 போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இந்த ரக ஏவுகணைகள், வான்வழி போர் தளங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேபோல, ரஷ்யாவின் KH-31P அல்லது AS-17 KRYPTON என்றழைக்கப்படும் ANTI-RADIATION ஏவுகணைகளும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன.

ஒலியின் வேகத்தைவிட வேகமாகப் பறக்க வல்ல இந்த ஏவுகணைகள், சுமார் 110 கிலோ மீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாக உள்ளன. ரேம்ஜெட் இஞ்சின் மூலம் வேகத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் திறனும் இந்த ரக ஏவுகணைகளில் உள்ளதாகவும், இந்தியா பயன்படுத்தி வரும் சுகோய்-30 எம்.கே.ஐ போர் விமானத்தின் மூலமும் இந்த ஏவுகணைகளை ஏவ முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் புதிய Kh-58 UShKE ரக ஏவுகணைகள் 245 கிலோ மீட்டர்வரை சென்று தாக்கும் திறனைப் பெற்றுள்ளதுடன், பலவித ரேடார் அலைவரிசைகளைக் குறிவைத்து தாக்க வல்லதாக உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் பிரிட்டனின் ALARM ரக ஏவுகணைகள் உள்ளன. தனித்துவமான இந்த ரக ஏவுகணைகள் ரேடார் அணைக்கப்பட்டாலும், PARACHUTE மூலம் காத்திருந்து மீண்டும் இயக்கப்படும்போது திடீரென இறங்கி தாக்கும் திறன் கொண்டவை. அதேபோல, பிரான்ஸின் ARMAT ரக ஏவுகணைகளும் ரேடால் நிலையங்களைத் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவும் தனது சொந்த ANTI-RADIATION ஏவுகணையான RUDRAM 1-ஐ உருவாக்கியுள்ளது. DRDO-வின் NEXT GENERATION ANTI-RADIATION MISSILE திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்ட இந்த ரக ஏவுகணைகள், சுமார் 150 கிலோ மீட்டர் முதல் 200 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கி இலக்கை அழிக்கும் திறனை கொண்டுள்ளது.

சுகோய்-30 எம்.கே.ஐ ரக போர் விமானங்கள் மூலம் ஏவப்படும் RUDRAM-1 ஏவுகணைகள், பலவித ரேடார் அதிர்வெண்களைக் கண்டறிந்து தாக்க வல்லது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக உருவாக்கப்பட்டு வரும் RUDRAM-2 மற்றும் RUDRAM-3 ரக ஏவுகணைகள் மேலும் நீண்ட தூரம் சென்று தாக்குவதுடன், பலவித விமானங்களுடனும் இணக்கமாகச் செயல்படும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகை ஏவுகணைகள் எதிரிகளின் கண்காணிப்பு அமைப்புகளை அழித்து, வான்வழி தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எளிதாக வழியமைக்கும் முக்கிய ஆயுதங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், RUDRAM-1 உருவாக்கம் தன்னாட்சி அடிப்படையிலான ANTI-RADIATION ஏவுகணை தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் போன்ற நாடுகளுள் ஒன்றாக இந்தியாவை உயர்த்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Tags: drdoRUDRAM-1 missilecreated by DRDO's extraordinary efforts: India has become autonomous in ANTI-RADIATION missile technologyRUDRAM-1 ஏவுகணைANTI-RADIATION ஏவுகணை
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Next Post

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies