தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் விடுதியில் உணவின் தரம் மோசமாக உள்ளதாகக் கூறி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதியில் மிகவும் தரமற்ற கலப்படமான உணவுகள் வழங்கப்படுவதாகவும், விடுதி உணவைச் சாப்பிட முடியவில்லை எனவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், உணவு குறித்து ஒப்பந்ததாரரிடம் மாணவர்கள் புகாரளித்த போது, அவர் அலட்சியமாகப் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதி மாணவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
			















