காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் - விதிமுறைகளை மீறி அராஜகம்!
Mar 15, 2026, 03:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 08:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் காவிரி ஆற்றங்கரையிலும், மின் மயானத்திலும் கொட்டப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். விதிமுறைகளை மீறி கொட்டப்படும் குப்பைகள் குறித்து பலமுறைப் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 12 வார்டுகளை உள்ளடக்கிய பள்ளிப்பாளையம் நகராட்சியின் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் கடந்த சில சிலமாதங்களாகவே சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் காவிரி ஆற்றின் அருகே உள்ள கால்வாய் மற்றும் மயானத்தில் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

கால்வாய்களில் கொட்டப்படும் குப்பைகளால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுத் துர்நாற்றம் வீசுவதோடு, அதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நகராட்சி நல அலுவலரிடம் பலமுறைப் புகார் அளித்தும், தமக்கும் இந்தச் செயலுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாதது போல நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதோடு மயான பூமியில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகளால் சுற்றியுள்ள குடியிருப்புகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் சாய ஆலைக் கழிவுகளால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது குப்பைகளால் எரிப்பதில் இருந்து வெளிவரும் புகைக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளில் கொட்டப்படும் குப்பைகளை முறையாகத் திடக்கழிவு திட்டத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை மீறி, ஆற்றங்கரையிலும் மின் மயானத்திலும் கொட்டிவரும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.

Tags: நாமக்கல்அராஜகம்Garbage dumped on the banks of the Cauvery River - anarchy in violation of regulationsகொட்டப்படும் குப்பைகள்பள்ளிப்பாளையம் நகராட்சி
ShareTweetSendShare
Previous Post

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

Next Post

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies