உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கடந்த 2ஆம் தேதி நவி மும்பையில் நடந்த மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இதன்மூலம், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினர் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, கோப்பையை பிரதமரிடம் கொடுத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
















