ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 7, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் ஜவுளிபூங்காவுக்கான அறிவிப்பு வெளியிட்ட இடத்தில் சாயப்பட்டறை ஆலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை கைவிடும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம் டால்மியா போர்ட் அருகே 880 கோடி ரூபாய் மதிப்பில் ஜவுளிபூங்கா அமைக்கப்படுவதாக அரசு வெளியிட்ட அறிவிப்பு அப்பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வேலைவாய்ப்பு பெருகுவதோடு உள்ளூர் பகுதிகளும் செழிக்கும் என்பதால் ஜவுளி பூங்காவை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையிலான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஜவுளிப்பூங்கா அமையவிருந்த இடத்தில் சாயப்பட்டறை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதாக வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு ஜாகீர் அம்மா பாளையம், புளியம்பட்டி, குள்ள கவுண்டனூர், வெள்ளக்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாயப்பட்டறை ஆலைக்கான அடிக்கல் நாட்டும் விழாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், மாவட்ட அமைச்சர் ராஜேந்திரனிடமும் மட்டுமல்லாது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இருப்பினும் சாயப்பட்டறை ஆலை அமைப்பதில் உறுதியாக இருக்கும் அரசு நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் தங்களின் வீடுகளில் ஏற்றிய கருப்புக் கொடியை வருவாய்த்துறையினர் காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தியுள்ளனர்.

சாயப்பட்டறை ஆலை அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து இன்று வரை இத்திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராடி வருகின்றனர். சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகளும் பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

தங்களின் எதிர்ப்பையும் மீறி சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை தொடர்ந்தால், தங்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு வழங்கிய ஆவணங்கள் அனைத்தையும் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பல்வேறு கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிலத்தடி நீருக்கும், விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: dyeing plantDalmia Port in Zakeer AmmapalayamKulla KoundanurVellakkalpatti.salemPuliyampattitextile park
ShareTweetSendShare
Previous Post

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

Next Post

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies